சக்தி தனக்கே கருவியாக்கு
ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும், இந்திய ஆன்மீகச் செழுமையை உலகறியச் செய்பவருமான ஜெர்மன் மேதை டாக்டர் மாக்ஸ் முல்லர் ஒருமுறை எழுதினார்.
“பிரம்மமானது ஈஸ்வரனாகவோ, பிரபுவாகவோ வரையறுக்கப்பட்ட ஒரு தனிக்கடவுளாகவோ வழிபடப்படலாம். அதே சமயம் ஒரு மூர்த்தித்துவத்தில் உள்ள எல்லா வரம்புகளையும் எல்லா வடிவங்களையும் எல்லா நிலைகளையும் கடந்து உயர்ந்து நிலை பெற்றும் இருக்கலாம்“
ஷண்மத ஸ்தாபனமாக பிரிக்கப்பட்ட அறுவடிவ வழிபாடுகளில் ஒன்றானது சாக்தம்.
குணங்களற்றது (நிர்க்குணம்). குணமுடையது (சகுணம்) என்று பிரம்மத்தை ஒரு பார்வையாகப் பார்க்கும் வகையில் சாக்தம் சகுணமாகப் பிரம்மத்தைப் பார்த்தது.
“பிரம்மம் ஒன்று அல்ல; பிரமங்கள் இரண்டாகும்“ என்று சில விமர்சகர்கள குறை கூறுவதற்கு வழிவகுத்தது இந்தப் பிரிவினை.
இதற்கு தத்துவப் பேரறிஞர் டாக்டர் திரு. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் தமது ‘’The Insights of Advaita’’ என்ற நூலில் ஒரு தெளிவான விளக்கம் அளித்தார்.
“அபரப் பிரம்மம் என்ற தாழ் நிலையில் கடவுள், குறிப்பிடப்படும் போதுஈ பிரம்மமானது கடவுள் நிலைக்குத் தாழ்ந்து விட்டதாகப் பொருள் படாது. ஆனால் அக்கடவுள் ஒரு சார்நிலை அனுபவத்தின் தாழ்மட்டத்திலிருந்து நோக்கப்பட்ட பிரம்மம் என்பதே சரி.
“பிரம்மத்திற்கு இரு வடிவங்கள் உண்டு. இரண்டு பிரம்மங்கள் இல்லை. தன்னுள் தான் அமைந்திருப்பது போன்ற பிரம்மம், உலகோடு தொடர்புடைய தன்மையில் இருப்பது போன்ற நிலையில் உள்ள பிரம்ம்ம் இவையே அவ்வடிவங்கள்.
முன்னால் கூறப்பட்டது வரம்பிடப் படாத பிரம்மம். பின்னால் கூறப்பட்டது நாம, ரூப, மாற்றங்களால் வரையறுக்கப்பட்ட பிரம்மம்“
பின்னால் கூறப்பட்ட வகையில் அமைந்த வழிபாடே சக்தி வழிபாடு. இது “primordial Energy” எனக்படும் பிரபஞ்ச இருப்பு, இயக்கம் இவற்றுக்கு ஆதாரமாய் அமைந்த ஆதி சக்தியை ஒரு வடிவில் காணச் செய்யும் பிரம்ம தரிசனம் ஆகும்.
மகாகவி பாரதி, தீவிரமான சக்தி வழிபாட்டுக்காரர்.
தமது “சக்தி தர்மம் என்ற கட்டுரையில்
“ஆத்மா உணர்வு, சக்தி செய்கை
உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்திகள் இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்று சொல்லும்“ என விவரித்தார்.
மகாகவி 38 பாடல்களில் சக்தியை வெவ்வேறு விதமாய் வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்று பூலோக குமாரி. இது சமஸ்கிருத்த்தில் எழுதப்பட்டது. லிபி மட்டும் தமிழ்.
இவை தவிர சக்தி என்று ஒரு வசன கவிதை ஆக 39.
இவை போக பாரததேவி என இந்திய நாட்டைத் தேவி வடிவமாகவும், சுதந்திர தேவியாகவும் உருவகித்துப் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 9.
நாட்டை தேவி என்று பெண் தெய்வ வடிவில் உயர்த்திப் போற்றும் போதும், பாரதியின் சக்தி வழிபாடே பின்னணி ஆற்றலாக நின்று நாட்டை சக்தி வடிவமாக்கிக் காணுகின்றது.
சக்தி வழிபாட்டைப் பற்றி பாரதி ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு “சாக்தம்“ என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்த்து. ஹூணர்கணை எல்லாம் துரத்தி, மஹா கீர்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி, ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செயத விக்கிரமாதித்ய ராஜா மகாகாளியை உபாஸனை செய்தவன்.
“அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன் சக்தி ஆராதனைத்தை மேற்கொண்டவள்.
“சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்“
சக்தி எது? அதன் செயல்கள் யாவை?
போற்றியகவல் - பாவிலே பாரதி தொடங்கும் போதே
“போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய்,
காப்பாய்!“ என்று எழுதினார்.
எது சக்தி என்பதற்கு விடை வரவில்லையே?
“கனியிலே சுவை, காற்றிலே இயக்கமும் கலந்தாற் போல அனைத்திலும் கலந்திருப்பது புதியதிற் புதுமை; முதியதில் முதுமை. உயிரிலே உயிர்; இறப்பிலும் உயிர் உண்டெனும் பொருளில் உண்மை. என்னுள்ளே நான் எனும் பொருள்.
நானையே பெருக்கித் தானென மாற்றுஞ் சாகாச் சுடர். கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடல். பிணியிருள் கொடுக்கும் பேரொளி ஞாயிறு யான் எனதின்றி இருக்கு நல்யோகியர் ஞானமாம் மகுட நடுத்திகழ்மணி.
செய்கை, ஊக்கம், சித்தம், அறிவாய் நின்றிடும் தாய்“
சக்தி வசன கவிதையிலே
“சக்தி முதற்பொருள்
பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு
சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு; ஒரு ஸ்வரஸ் தானம்.
சக்தியைப் பற்றி எழுத எழுத, மின்னலின் கொடியோட்டம் பாய்வது போல் மகாகவியின் கற்பனை விரிந்து பாய்கிறது.
பாரதி சக்தி வழிபாட்டைப் பற்றி மாக்ஸ்முல்லரும் மகாதேவனும் குறிப்பிட்டதையே தமக்கே உரித்தான தீவிரம் கலந்து சொல்கிறார்.
நவசக்தி மார்க்கம் கட்டுரையில்-
“பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்த மதஸ்தர் நிர்க்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல், பெண்பாலாக்க் கருதி “ லோக மாதா“ என்று போற்றினார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “என் தாய் காளி“ என்று தான் பெரும்பாலும் பேசுவது வழக்கம்.
பராதியின் சக்தி வழிபாடு ஒரு கோணத்தில் தூய்மையான குழந்தையின் நம்பிக்கை போல் அவ்வளவு வெள்ளையாகத் தோற்றமளிப்பது உண்டு.
தமிழ்க் விதையில் ஓர் உரையாடலையே கவிதையாக்கி, கவிஞர் என்ற மூர்த்தித்துவத்தையே வெளிப்படுத்தாது. கவிதையில் எங்குமே தலையே காட்டாமல் ஒரு மகத்தான பொருளை உணர்த்திய பாட்டு என்று நாம் கருதும் பாட்டு வண்டிக்காரன் பாட்டு. அதில் ஒரு சிறிய நாடகப் பாங்கு. ஒரு பின்னணி. ஒரு மின்வீச்சு இத்தனையும் தென்படும்.
அதில் தென்படும் குழந்தை நம்பிக்கை நம் நெஞ்சில் வேல் போல் பாய்ந்து கண் கலங்கி விடுகிறது.
பாட்டைப் பார்ப்போம்
“காட்டு வழிதனிலே - அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்“? - “எங்கள்
வீட்டுக் குலதெய்வம் - தம்பி
வீரம்மை காக்குமடா!
“நிறுத்து வண்டியென்றே - கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே - எங்கள்
கறுத்த மாரியின் பேர் சொன்னால்
காலனும் அஞ்சுமடா!“
சக்தி என்ற வசன கவிதையில் சகல செயல்களும் சக்தியின் அசைவுகள் என்று நிறுவிய மகாகவி வாழ்க்கைக்கே நறுக்குத் தெறித்தாற் போல் ஒரு பொருள் கூறுகிறார்.
“வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல் இதன் பயன் இன்பமெய்தல்“ என்றார்
சக்தியின் பிறப்பு பற்றி இந்த கவிதையில் -
“இவன் எப்படி உண்டாயினாள்? அதுதான் தெரியவில்லை.
இவள் தானே பிறந்த தாய்; தான் என்ற பரம் பொருளிடத்தே“ என்று அனுமானம் கூறுகிறார்.
சக்தி வழிபாட்டில் மூழ்கி முக்குளித்துக் கரையேறும் மனமின்றித் திளைத்தவர் பாரதி.
கதைகள் சொல்லிக் கவிதையெழுதவோ காவியம் பல நீண்டன காட்டவோ, விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவும் நாடகச் செய்யுளை எழுதவோ -
நாட்டு மக்களின் பிணியும் வறுமையும் நையப் பாடவோ, நாட்டி மானுடச் சாதியை ஒன்றென்று கொண்டு வைய முழுவதும் பயனுறப் பாட்டிலே அறங்காட்டவோ, பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் மின்கவி ஓதவோ -
அவருக்கு உள்ளத்தில் அழைப்புக்கள் வந்து கொண்டே இருந்தன.
எனினும் -
“ அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவுந் தனக்னெக் கேட்கின்றாள்“ என்றே அவர் உள் மனத்தில் சக்தியின் குரல் வற்புறுத்திற்று.
“யாது மாகி நின்றாய் - காளி
எங்கு நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் - காளி
தெய்வ லீலை யன்றோ?“
என்று அவர் சித்தம் சக்தியிலே தெளிந்த்து.
மனித அறிவை சக்திப் பார்வையில் பாரதி பார்த்தவிதமே புதியது
மகா காளியின் புகழ் பாடலில்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமலர் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை
எழுதினார்.
அடைக்கலப் பாட்டுக்கள் பல எழுதியவர் பாரதி, முருகனிடம், விநாயகரிடம், சரஸ்வதியிடம், லஷ்மியிடம், கண்ணனிடம் எனப் பல தெய்வ வடிவங்களிடமும் சரணம் கோரி, அடைக்கலம் வேண்டி அவர் பாடியதுண்டு. எனினும் முத்துமாரி பாடலில் -
“உலகத்து நாயகியே - எங்கள் முத்து
மாரியம்மா - எங்கள் முத்துமாரி
உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி!“
தொடங்கும்போதே சரணாகதி தத்துவத்தின் உட்கருவைத் தொகுகின்ற உருக்கம் பிற பாடல்களினும் மிஞ்சி நிற்கிறது.
மனம் வெளுக்க வழியில்லை
பேதைமைக்கு மாற்றில்லை
பல கற்றும் பலகேட்டும் பயனொன்றுமில்லையடி
நிலையெங்கும் காணவில்லை
என்று போட்ட வரிகளில் இதய முரசு அதிரும் நாதம் எழுதுகிறதே!
காணி நிலம் வேண்டும், என்று பாரதிக்கு பராசக்தியிடம் தான் கேட்கத் தோன்றுகிறது. அவ்வளவு உரிமை.
பராசக்தியின் முடிவைப் பிடித்து உலுக்குவது போல் -
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுலையோ
என்று கேட்கிற அதிகாரம்தான் வருகிறது. வரிசையாகச் சில கோரிக்கைகளை பராசக்தி முன் வைத்துவிட்டு இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? என்று மிடுக்கும் அங்கேதான் வெளிப்படுகிறது.
ஊழிக் கூத்து கவிதையில்
“காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆனந்தக்கூத் திடுவாய்
அன்னை, அன்னை ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை
என்று
அக்கூத்திலே களித்துக் குதி போடுகிறது மகாகவியின் சித்தம்.
குதிபோட்டுத்தானே கூத்தாடவும் தொடங்கிய அனுபவம்தான் சக்திக் கூத்து கவிதை.
தகத் தகத்தகத் தகதகவென் நாட்டோமோ? - சிவ
சக்தி சக்தி சக்தி யென்று பாடாமோ?
எனச் சொல்ல போடும் கூத்து நம் மனக்கூத்தாகிறது.
சக்தி த்த்துவத்தின் மூலக்கனல் சுவையை அனுபவித்து நமக்குப் பரிந்துரைப்பது போல்பாரதி மேலே நாலு வரிகள் போடுகிறார்.
“புகப்புகப் புகவின்பமடா போலெலாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது
குழந்தை யதன் தாயடிக்கீழ் சேய்போலே!“
சக்தி வழிபாடு எவ்விதம் இருக்கவேண்டும்?
ஐம்புலன்களையும், கண்டம், தோள் என்ற உடல் உருப்புக்களையும், அகம், மனம், சித்தம், நெஞ்சம், மதி என உள்ளத்தின் பல தோற்றங்களையும் சக்தி தனக்கே கருவியாக்கு என்கிறார் பாரதி.
அது போதவில்லை என்று உணர்வு மேலிடுகிறது.
மதி, அகம் இரண்டையும் சக்தி தனக்கே உரிமையாக்குக, உடமையாக்குக.
இப்படி சர்வ சமஸ்தமான ஆத்ம சமர்ப்பணம் செய்தால் வரும் விளைவுகளாகப் பாரதி கூறும் பயன்கள் பற்பல.
அவை அனைத்திலும் உச்சமானதை மட்டும் ஒரு குறிப்பிற்காகக் காண்போம்.
அகம்,
சக்திதனக் கேயுடைமை யாக்கு - அது
தன்னையவன் கோயிலென்று காணும் - அகம்
சக்திதனக் கேயுடைமை யாக்கு - அது
தன்னையெண்ணித் துன்பமுற நாணும்
சக்தி (2) வசன கவிதையில் -
“கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்
மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் -
இச்செயல்களை நமக்கு மஹாசக்தி அருள்புரிக“ என்று வேண்டும் போது, சக்தி வழிபாட்டின் வரமாக அவை கோருவதிலேயே அவர் இலக்கியக் கொள்கை வெளிப்படுகிறது.
ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும், இந்திய ஆன்மீகச் செழுமையை உலகறியச் செய்பவருமான ஜெர்மன் மேதை டாக்டர் மாக்ஸ் முல்லர் ஒருமுறை எழுதினார்.
“பிரம்மமானது ஈஸ்வரனாகவோ, பிரபுவாகவோ வரையறுக்கப்பட்ட ஒரு தனிக்கடவுளாகவோ வழிபடப்படலாம். அதே சமயம் ஒரு மூர்த்தித்துவத்தில் உள்ள எல்லா வரம்புகளையும் எல்லா வடிவங்களையும் எல்லா நிலைகளையும் கடந்து உயர்ந்து நிலை பெற்றும் இருக்கலாம்“
ஷண்மத ஸ்தாபனமாக பிரிக்கப்பட்ட அறுவடிவ வழிபாடுகளில் ஒன்றானது சாக்தம்.
குணங்களற்றது (நிர்க்குணம்). குணமுடையது (சகுணம்) என்று பிரம்மத்தை ஒரு பார்வையாகப் பார்க்கும் வகையில் சாக்தம் சகுணமாகப் பிரம்மத்தைப் பார்த்தது.
“பிரம்மம் ஒன்று அல்ல; பிரமங்கள் இரண்டாகும்“ என்று சில விமர்சகர்கள குறை கூறுவதற்கு வழிவகுத்தது இந்தப் பிரிவினை.
இதற்கு தத்துவப் பேரறிஞர் டாக்டர் திரு. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் தமது ‘’The Insights of Advaita’’ என்ற நூலில் ஒரு தெளிவான விளக்கம் அளித்தார்.
“அபரப் பிரம்மம் என்ற தாழ் நிலையில் கடவுள், குறிப்பிடப்படும் போதுஈ பிரம்மமானது கடவுள் நிலைக்குத் தாழ்ந்து விட்டதாகப் பொருள் படாது. ஆனால் அக்கடவுள் ஒரு சார்நிலை அனுபவத்தின் தாழ்மட்டத்திலிருந்து நோக்கப்பட்ட பிரம்மம் என்பதே சரி.
“பிரம்மத்திற்கு இரு வடிவங்கள் உண்டு. இரண்டு பிரம்மங்கள் இல்லை. தன்னுள் தான் அமைந்திருப்பது போன்ற பிரம்மம், உலகோடு தொடர்புடைய தன்மையில் இருப்பது போன்ற நிலையில் உள்ள பிரம்ம்ம் இவையே அவ்வடிவங்கள்.
முன்னால் கூறப்பட்டது வரம்பிடப் படாத பிரம்மம். பின்னால் கூறப்பட்டது நாம, ரூப, மாற்றங்களால் வரையறுக்கப்பட்ட பிரம்மம்“
பின்னால் கூறப்பட்ட வகையில் அமைந்த வழிபாடே சக்தி வழிபாடு. இது “primordial Energy” எனக்படும் பிரபஞ்ச இருப்பு, இயக்கம் இவற்றுக்கு ஆதாரமாய் அமைந்த ஆதி சக்தியை ஒரு வடிவில் காணச் செய்யும் பிரம்ம தரிசனம் ஆகும்.
மகாகவி பாரதி, தீவிரமான சக்தி வழிபாட்டுக்காரர்.
தமது “சக்தி தர்மம் என்ற கட்டுரையில்
“ஆத்மா உணர்வு, சக்தி செய்கை
உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்திகள் இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்று சொல்லும்“ என விவரித்தார்.
மகாகவி 38 பாடல்களில் சக்தியை வெவ்வேறு விதமாய் வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்று பூலோக குமாரி. இது சமஸ்கிருத்த்தில் எழுதப்பட்டது. லிபி மட்டும் தமிழ்.
இவை தவிர சக்தி என்று ஒரு வசன கவிதை ஆக 39.
இவை போக பாரததேவி என இந்திய நாட்டைத் தேவி வடிவமாகவும், சுதந்திர தேவியாகவும் உருவகித்துப் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 9.
நாட்டை தேவி என்று பெண் தெய்வ வடிவில் உயர்த்திப் போற்றும் போதும், பாரதியின் சக்தி வழிபாடே பின்னணி ஆற்றலாக நின்று நாட்டை சக்தி வடிவமாக்கிக் காணுகின்றது.
சக்தி வழிபாட்டைப் பற்றி பாரதி ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு “சாக்தம்“ என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்த்து. ஹூணர்கணை எல்லாம் துரத்தி, மஹா கீர்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி, ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செயத விக்கிரமாதித்ய ராஜா மகாகாளியை உபாஸனை செய்தவன்.
“அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன் சக்தி ஆராதனைத்தை மேற்கொண்டவள்.
“சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்“
சக்தி எது? அதன் செயல்கள் யாவை?
போற்றியகவல் - பாவிலே பாரதி தொடங்கும் போதே
“போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய்,
காப்பாய்!“ என்று எழுதினார்.
எது சக்தி என்பதற்கு விடை வரவில்லையே?
“கனியிலே சுவை, காற்றிலே இயக்கமும் கலந்தாற் போல அனைத்திலும் கலந்திருப்பது புதியதிற் புதுமை; முதியதில் முதுமை. உயிரிலே உயிர்; இறப்பிலும் உயிர் உண்டெனும் பொருளில் உண்மை. என்னுள்ளே நான் எனும் பொருள்.
நானையே பெருக்கித் தானென மாற்றுஞ் சாகாச் சுடர். கவலை நோய் தீர்க்கும் மருந்தின் கடல். பிணியிருள் கொடுக்கும் பேரொளி ஞாயிறு யான் எனதின்றி இருக்கு நல்யோகியர் ஞானமாம் மகுட நடுத்திகழ்மணி.
செய்கை, ஊக்கம், சித்தம், அறிவாய் நின்றிடும் தாய்“
சக்தி வசன கவிதையிலே
“சக்தி முதற்பொருள்
பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு
சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை
சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு; ஒரு ஸ்வரஸ் தானம்.
சக்தியைப் பற்றி எழுத எழுத, மின்னலின் கொடியோட்டம் பாய்வது போல் மகாகவியின் கற்பனை விரிந்து பாய்கிறது.
பாரதி சக்தி வழிபாட்டைப் பற்றி மாக்ஸ்முல்லரும் மகாதேவனும் குறிப்பிட்டதையே தமக்கே உரித்தான தீவிரம் கலந்து சொல்கிறார்.
நவசக்தி மார்க்கம் கட்டுரையில்-
“பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்த மதஸ்தர் நிர்க்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல், பெண்பாலாக்க் கருதி “ லோக மாதா“ என்று போற்றினார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “என் தாய் காளி“ என்று தான் பெரும்பாலும் பேசுவது வழக்கம்.
பராதியின் சக்தி வழிபாடு ஒரு கோணத்தில் தூய்மையான குழந்தையின் நம்பிக்கை போல் அவ்வளவு வெள்ளையாகத் தோற்றமளிப்பது உண்டு.
தமிழ்க் விதையில் ஓர் உரையாடலையே கவிதையாக்கி, கவிஞர் என்ற மூர்த்தித்துவத்தையே வெளிப்படுத்தாது. கவிதையில் எங்குமே தலையே காட்டாமல் ஒரு மகத்தான பொருளை உணர்த்திய பாட்டு என்று நாம் கருதும் பாட்டு வண்டிக்காரன் பாட்டு. அதில் ஒரு சிறிய நாடகப் பாங்கு. ஒரு பின்னணி. ஒரு மின்வீச்சு இத்தனையும் தென்படும்.
அதில் தென்படும் குழந்தை நம்பிக்கை நம் நெஞ்சில் வேல் போல் பாய்ந்து கண் கலங்கி விடுகிறது.
பாட்டைப் பார்ப்போம்
“காட்டு வழிதனிலே - அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்“? - “எங்கள்
வீட்டுக் குலதெய்வம் - தம்பி
வீரம்மை காக்குமடா!
“நிறுத்து வண்டியென்றே - கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே - எங்கள்
கறுத்த மாரியின் பேர் சொன்னால்
காலனும் அஞ்சுமடா!“
சக்தி என்ற வசன கவிதையில் சகல செயல்களும் சக்தியின் அசைவுகள் என்று நிறுவிய மகாகவி வாழ்க்கைக்கே நறுக்குத் தெறித்தாற் போல் ஒரு பொருள் கூறுகிறார்.
“வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல் இதன் பயன் இன்பமெய்தல்“ என்றார்
சக்தியின் பிறப்பு பற்றி இந்த கவிதையில் -
“இவன் எப்படி உண்டாயினாள்? அதுதான் தெரியவில்லை.
இவள் தானே பிறந்த தாய்; தான் என்ற பரம் பொருளிடத்தே“ என்று அனுமானம் கூறுகிறார்.
சக்தி வழிபாட்டில் மூழ்கி முக்குளித்துக் கரையேறும் மனமின்றித் திளைத்தவர் பாரதி.
கதைகள் சொல்லிக் கவிதையெழுதவோ காவியம் பல நீண்டன காட்டவோ, விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவும் நாடகச் செய்யுளை எழுதவோ -
நாட்டு மக்களின் பிணியும் வறுமையும் நையப் பாடவோ, நாட்டி மானுடச் சாதியை ஒன்றென்று கொண்டு வைய முழுவதும் பயனுறப் பாட்டிலே அறங்காட்டவோ, பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் மின்கவி ஓதவோ -
அவருக்கு உள்ளத்தில் அழைப்புக்கள் வந்து கொண்டே இருந்தன.
எனினும் -
“ அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவுந் தனக்னெக் கேட்கின்றாள்“ என்றே அவர் உள் மனத்தில் சக்தியின் குரல் வற்புறுத்திற்று.
“யாது மாகி நின்றாய் - காளி
எங்கு நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் - காளி
தெய்வ லீலை யன்றோ?“
என்று அவர் சித்தம் சக்தியிலே தெளிந்த்து.
மனித அறிவை சக்திப் பார்வையில் பாரதி பார்த்தவிதமே புதியது
மகா காளியின் புகழ் பாடலில்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமலர் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை
எழுதினார்.
அடைக்கலப் பாட்டுக்கள் பல எழுதியவர் பாரதி, முருகனிடம், விநாயகரிடம், சரஸ்வதியிடம், லஷ்மியிடம், கண்ணனிடம் எனப் பல தெய்வ வடிவங்களிடமும் சரணம் கோரி, அடைக்கலம் வேண்டி அவர் பாடியதுண்டு. எனினும் முத்துமாரி பாடலில் -
“உலகத்து நாயகியே - எங்கள் முத்து
மாரியம்மா - எங்கள் முத்துமாரி
உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள முத்து
மாரியம்மா எங்கள் முத்துமாரி!“
தொடங்கும்போதே சரணாகதி தத்துவத்தின் உட்கருவைத் தொகுகின்ற உருக்கம் பிற பாடல்களினும் மிஞ்சி நிற்கிறது.
மனம் வெளுக்க வழியில்லை
பேதைமைக்கு மாற்றில்லை
பல கற்றும் பலகேட்டும் பயனொன்றுமில்லையடி
நிலையெங்கும் காணவில்லை
என்று போட்ட வரிகளில் இதய முரசு அதிரும் நாதம் எழுதுகிறதே!
காணி நிலம் வேண்டும், என்று பாரதிக்கு பராசக்தியிடம் தான் கேட்கத் தோன்றுகிறது. அவ்வளவு உரிமை.
பராசக்தியின் முடிவைப் பிடித்து உலுக்குவது போல் -
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுலையோ
என்று கேட்கிற அதிகாரம்தான் வருகிறது. வரிசையாகச் சில கோரிக்கைகளை பராசக்தி முன் வைத்துவிட்டு இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? என்று மிடுக்கும் அங்கேதான் வெளிப்படுகிறது.
ஊழிக் கூத்து கவிதையில்
“காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆனந்தக்கூத் திடுவாய்
அன்னை, அன்னை ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை
என்று
அக்கூத்திலே களித்துக் குதி போடுகிறது மகாகவியின் சித்தம்.
குதிபோட்டுத்தானே கூத்தாடவும் தொடங்கிய அனுபவம்தான் சக்திக் கூத்து கவிதை.
தகத் தகத்தகத் தகதகவென் நாட்டோமோ? - சிவ
சக்தி சக்தி சக்தி யென்று பாடாமோ?
எனச் சொல்ல போடும் கூத்து நம் மனக்கூத்தாகிறது.
சக்தி த்த்துவத்தின் மூலக்கனல் சுவையை அனுபவித்து நமக்குப் பரிந்துரைப்பது போல்பாரதி மேலே நாலு வரிகள் போடுகிறார்.
“புகப்புகப் புகவின்பமடா போலெலாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது
குழந்தை யதன் தாயடிக்கீழ் சேய்போலே!“
சக்தி வழிபாடு எவ்விதம் இருக்கவேண்டும்?
ஐம்புலன்களையும், கண்டம், தோள் என்ற உடல் உருப்புக்களையும், அகம், மனம், சித்தம், நெஞ்சம், மதி என உள்ளத்தின் பல தோற்றங்களையும் சக்தி தனக்கே கருவியாக்கு என்கிறார் பாரதி.
அது போதவில்லை என்று உணர்வு மேலிடுகிறது.
மதி, அகம் இரண்டையும் சக்தி தனக்கே உரிமையாக்குக, உடமையாக்குக.
இப்படி சர்வ சமஸ்தமான ஆத்ம சமர்ப்பணம் செய்தால் வரும் விளைவுகளாகப் பாரதி கூறும் பயன்கள் பற்பல.
அவை அனைத்திலும் உச்சமானதை மட்டும் ஒரு குறிப்பிற்காகக் காண்போம்.
அகம்,
சக்திதனக் கேயுடைமை யாக்கு - அது
தன்னையவன் கோயிலென்று காணும் - அகம்
சக்திதனக் கேயுடைமை யாக்கு - அது
தன்னையெண்ணித் துன்பமுற நாணும்
சக்தி (2) வசன கவிதையில் -
“கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்
மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் -
இச்செயல்களை நமக்கு மஹாசக்தி அருள்புரிக“ என்று வேண்டும் போது, சக்தி வழிபாட்டின் வரமாக அவை கோருவதிலேயே அவர் இலக்கியக் கொள்கை வெளிப்படுகிறது.
No comments:
Post a Comment