விதியே, விதியே தமிழச் சாதியை யென்செயக் கருதி யிருக்கின்றாயடா?
தான் தமிழன் என்பதில் பாரதிக்கு தலைநிமிர்ந்த மிடுக்கு உண்டு.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல். இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!“
-என்று ஒரு முறை மட்டுமல்ல,
“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
………………………………….
வள்ளுவன் தன்னை உலகினுக்ககே - தந்து
வான்புகழ்கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு“
என்று இரண்டாம் முறையும்,
“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறு தியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவு மழகுங் கருதியும்
“எல்லையொன்றின்மை“ யெனும் பொருளதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்…“
என்றும் மூன்றாவது முறையாகவும்,
“கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்
………….
“சேரன் தம்பி சிலம்பை யிசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்”
என்று சுயசரிதையில் நான்காவது முறையாகவும், தமது இதயத்தில் நிலவிய தமிழ்ப் பெருமையின் அஸ்திவாரங்களைச் சுட்டிக்காட்டினார்.
கம்பர், திருவள்ளுவர், இளங்கோ ஆகிய இம்மூவர்தான், தமிழ்ப் பண்பாடு கால நடை கடந்து சென்று கடைந்தெடுத்த அமுதக்கலசங்கள் என்பது பாரதி முடிவு.
“தமிழ்நாட்டு நாகரீகம்“ என்ற கட்டுரையில்-
“ஒரு தேசத்தின் நாகரீகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத்திலே சொன்னேன்” என்றவர் இந்திய நாட்டின் அரசுரிமையை இழந்தாலும் ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம்” என்று மெக்காலே சொன்னதை நினைவுறுத்தி -
இந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்; சிலப்பதிகாரமியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்” என்று மற்றுமொரு வலியுறுத்துகிறார்.
மேலுக்கு இந்த மூன்று கவிமேருகளின் உயர்வினால் தான் தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று தாம் உறுதி கொண்டிருந்ததாக பாரதி ஒரு விளக்கம் தருகிறார்.
எத்தகைய சூழ்நிலையில்?
இக்கேள்விக்கு -
“……ஒரு பதினாயிரஞ்
சனிவாய்ப்பட்டுத் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி யுழைத்திடு நெறிகளைக்
கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்
என்று பதிலுறுத்தார் பாரதி.
அதற்கு மேலே எழுதிய வரிகளில், மகாகவியின் தமிழுள்ளம் அனுபவித்த நோவுகள் , தன் இனம் படும் பாடு கண்டு துடிதுடித்த உணர்வுகள் எந்தத் தமிழனையும் உலுக்குவது போன்ற வேகத்துடன் வெளிப்பட்டன.
“ஆப்பிரிக் கத்துக்குக் காப்பிரி நாட்டிலுந்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழ்ச் சாதி தடியுதை யுண்டும்
காலுதையுண்டும் கயிற்றடியுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதந்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்”
என்று கடல் கடந்தும் இல்லம் துறந்தும், பிழைக்க வழி தேடிச் சென்ற தமிழ்கூறு நல்லுலகின் துன்பங்கேட்டுத் துடித்தவர் பாரதி.
தமிழரின் துன்பம் பாரதியின் சொந்தத் துன்பம்
தமிழரின் பெருமை அவரது சொந்தப் பெருமை.
தமிழச்சி தவிர வேறொருத்தி அழகு என்பதைக் கேட்கவோ பார்க்கவோ முடியாத அளவு வருத்தம் கொண்டது பாரதியின் தமிழ்பற்று.
தமிழ்மொழியின் மரணம் குறித்த ஜோசியம் சொல்லும் போக்கு, அவர் காலத்திலும் ஏற்பட்டிருந்ததை அவர் கண்டு தமது தென்றலுடன் பிறந்த பாஷை என்ற கட்டுரையில்-
“பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரை குறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு மேலிட்டவர்களாகித் தமிழ்மொழியே இறந்து போய்விட வேண்டுமென்றும் கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
தமிழருக்குத் தன்னம்பிக்கை தேவை என்பதால் தமிழருக்கு என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்-
“உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள் தெய்வங் கண்ட கவிகள், அற்புமான ச ங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்ப நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத் தர்மிஷ் டர் பெருகுகின்றனர்” என்று எழுதினார்.
மேலும் நம்மைத் தெளிவாக்க….
“உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணாடியிலே போய்ப் பார்” என்று எழுதினார்.
தாம் வாழ்ந்திருப்பதற்கு என்ன நோக்கம் என்று குறிப்பிடுகையில் பாரதி “அந்தசக்தி” என்ற கட்டுரையில்-
“தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவ நாம் உயிர் தரிக்கின்றோம்” என்று தெளிவாக எழுதினார்.
வெறும் உணர்ச்சியால் மட்டுமல்ல; அறிவினாலும் ஆய்ந்து பார்த்து அச்சக்தி எதனால் எல்லாம் அதிகப்படும் என்பதை உணர்ந்து தமிழுக்கு அறிவித்தார்.
“ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை,. மற்போர் முதலியவற்றிலே பழகுதல், பாடுதல் தர்க்கம், வாதம், தவம், பிரம்மச்சரியம் சுத்தம் முதலியவற்றால் ஓர் ஜாதிக்குச் சக்தி அதிகப்படுத்துகிறது” என்றார்.
“மனம் வாக்கு செயல் மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளும் புறமும் மாசில்லாது செய்யப் பழகவேண்டும். பயம், ஸந்தேஹம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தியேற்படும்” என்று தெளிவு வேறு அறிவித்தார்.
தமிழர் வீழ்ச்சிக்கும், அவர்கள் சக்திச் சிதறலுக்கும் இரண்டு காரணங்களை பாரதி மிகத்தெளிவாக அறிந்திருந்தார். முதலாவது சாதி வேற்றுமை. அடுத்து பொய்ச் சாத்திரங்களில் நம்பிக்கை. இவை இரண்டும் ஒழிய வேண்டுமென்று அடிக்கடி எச்சரித்தார்.
“தமிழருக்கு“ - கட்டுரையில்
“(தமிழா) ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே, “ஜாதியிரண்டொழிய வேறில்லை” என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள் ” என்றார்.
ஜாதிக் குழப்பம் கட்டுரையில் -
“ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில் மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்வம்,ஸஹோதரத்துவம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால் அது சாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா?” என்று மனம் உழன்று கூறினார்.
பொய்ச்சாத்திரங்களில் நம்பிக்கை தமிழருக்கு வலுப்பதைப் பற்றிய கவலை பாரதிக்கு ஏற்பட்டிருந்தது.
பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
பொய்மை யாகிப் புழுவென மடிவர்.
என்று “தமிழச்சாதி” கவிதையில் எச்சரித்துவிட்டு எது சாத்திரம் என்று சுட்டிக்காட்டி மேலும் ஓர் அபாய அறிவிப்பு தந்தார்.
சாத்திரம் - (அதாவது, மதியிலே தழுவிய கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம் ஈங்கிதிற் கலக்க மெய்திடு மாயின் மற்றதன் பின்னர் மருந்தொன் றில்லை“
தமிழருக்கு கட்டுரையிலோ -
“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை - எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய், இவற்றை நீக்கிவிடு” என்றும்
“தமிழா எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை; எதிர் நின்று கேட்பதெல்லாம்பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரந்தான் மெய், பி்ந்திய சாஸ்திரம் பொய் என்று தீர்மானம் செய்து கொள்ளாதே காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஓர் கணக்கு ஏற்பட்டிருக்கின்றதா?” என்று கேட்டுவிட்டு ஓர் உவமையும் சொன்னார்.
“தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லிய மூடர்கள் உப்புநீரைக் குடிக்கிறார்கள்" என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.
“வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு புராணங்களைக் கேட்டு பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே” என்று மேலும் இடித்துரைத்துவிட்டு,
“வருங்காலம்” கட்டுரையில் -
“உலகம் எவ்வளவு தீரமாக மாறிக்கொண்டு வருகிறதென்பதை தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவரங்களில் மனத்தைப் பதிய வைத்துக் கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விஷயங்களிலும், அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை” என்று அறிவித்தார்.
பரந்த உலக அனுபவமும், பல நாடுகளில் சென்று வாழ்வதும் நமது அற்பச் சண்டைகளை விலக்கக் கற்றுத்தரும்; புதிய வழிகாட்டும் என்பதிலே அவருக்கு மகத்தான நம்பிக்கை உண்டு.
அதே கட்டுரையில் -
“வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள், புறப்படுங்கள், தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே புத்திமான்களே!பயணத்து க்குப் பணம் தயார் செ ய்து கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளிநாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்பட வேண்டாம்” என்று ஊக்குவிக்கிறார்.
இந்தச் சிந்தனையின் எதிரொலிதான் தமிழ்த் தாய் பாட்டிலே -
“மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையொங்கும்”
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லமோ!
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!
என்ற வரிகளில் கேட்கிறது.
தமிழச்சாதி கட்டுரையில் “விதியே விதியே விதியே தமிழச்சாதியை என் செயக்கருதியிருக்கின்றாயடா” என்று சட்டையை உலக்கிக் கேட்பது போல் கேள்வி கேட்டாலும்,
நெஞ்சமும் தெய்வபக்தியும் தன்னல மறுப்பும் உடைய பல மேலோர்களை இப்போது நாட்டிலே காண்கிறோம். இது வீணாக மாட்டாது. நம்மைப் பற்றியிருந்த புன்னோய் சீக்கிரத்திலே மாறிப்போய்விடும். வானத்திலே
துந்துபியொலி அதிரக் கேட்கின்றோம்” என்று நம்பிக்கை வாக்கே வழங்குகிறார் அந்தசக்தி கட்டுரையில்,
அதுவே தமிழருக்கு அவர் வழங்கிய வாழ்த்தாகும்.
தான் தமிழன் என்பதில் பாரதிக்கு தலைநிமிர்ந்த மிடுக்கு உண்டு.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல். இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!“
-என்று ஒரு முறை மட்டுமல்ல,
“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
………………………………….
வள்ளுவன் தன்னை உலகினுக்ககே - தந்து
வான்புகழ்கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு“
என்று இரண்டாம் முறையும்,
“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறு தியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவு மழகுங் கருதியும்
“எல்லையொன்றின்மை“ யெனும் பொருளதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்…“
என்றும் மூன்றாவது முறையாகவும்,
“கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்
………….
“சேரன் தம்பி சிலம்பை யிசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்”
என்று சுயசரிதையில் நான்காவது முறையாகவும், தமது இதயத்தில் நிலவிய தமிழ்ப் பெருமையின் அஸ்திவாரங்களைச் சுட்டிக்காட்டினார்.
கம்பர், திருவள்ளுவர், இளங்கோ ஆகிய இம்மூவர்தான், தமிழ்ப் பண்பாடு கால நடை கடந்து சென்று கடைந்தெடுத்த அமுதக்கலசங்கள் என்பது பாரதி முடிவு.
“தமிழ்நாட்டு நாகரீகம்“ என்ற கட்டுரையில்-
“ஒரு தேசத்தின் நாகரீகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத்திலே சொன்னேன்” என்றவர் இந்திய நாட்டின் அரசுரிமையை இழந்தாலும் ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம்” என்று மெக்காலே சொன்னதை நினைவுறுத்தி -
இந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்; சிலப்பதிகாரமியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்” என்று மற்றுமொரு வலியுறுத்துகிறார்.
மேலுக்கு இந்த மூன்று கவிமேருகளின் உயர்வினால் தான் தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று தாம் உறுதி கொண்டிருந்ததாக பாரதி ஒரு விளக்கம் தருகிறார்.
எத்தகைய சூழ்நிலையில்?
இக்கேள்விக்கு -
“……ஒரு பதினாயிரஞ்
சனிவாய்ப்பட்டுத் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி யுழைத்திடு நெறிகளைக்
கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்
என்று பதிலுறுத்தார் பாரதி.
அதற்கு மேலே எழுதிய வரிகளில், மகாகவியின் தமிழுள்ளம் அனுபவித்த நோவுகள் , தன் இனம் படும் பாடு கண்டு துடிதுடித்த உணர்வுகள் எந்தத் தமிழனையும் உலுக்குவது போன்ற வேகத்துடன் வெளிப்பட்டன.
“ஆப்பிரிக் கத்துக்குக் காப்பிரி நாட்டிலுந்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழ்ச் சாதி தடியுதை யுண்டும்
காலுதையுண்டும் கயிற்றடியுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதந்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்”
என்று கடல் கடந்தும் இல்லம் துறந்தும், பிழைக்க வழி தேடிச் சென்ற தமிழ்கூறு நல்லுலகின் துன்பங்கேட்டுத் துடித்தவர் பாரதி.
தமிழரின் துன்பம் பாரதியின் சொந்தத் துன்பம்
தமிழரின் பெருமை அவரது சொந்தப் பெருமை.
தமிழச்சி தவிர வேறொருத்தி அழகு என்பதைக் கேட்கவோ பார்க்கவோ முடியாத அளவு வருத்தம் கொண்டது பாரதியின் தமிழ்பற்று.
தமிழ்மொழியின் மரணம் குறித்த ஜோசியம் சொல்லும் போக்கு, அவர் காலத்திலும் ஏற்பட்டிருந்ததை அவர் கண்டு தமது தென்றலுடன் பிறந்த பாஷை என்ற கட்டுரையில்-
“பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரை குறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு மேலிட்டவர்களாகித் தமிழ்மொழியே இறந்து போய்விட வேண்டுமென்றும் கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
தமிழருக்குத் தன்னம்பிக்கை தேவை என்பதால் தமிழருக்கு என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்-
“உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள் தெய்வங் கண்ட கவிகள், அற்புமான ச ங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்ப நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத் தர்மிஷ் டர் பெருகுகின்றனர்” என்று எழுதினார்.
மேலும் நம்மைத் தெளிவாக்க….
“உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணாடியிலே போய்ப் பார்” என்று எழுதினார்.
தாம் வாழ்ந்திருப்பதற்கு என்ன நோக்கம் என்று குறிப்பிடுகையில் பாரதி “அந்தசக்தி” என்ற கட்டுரையில்-
“தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவ நாம் உயிர் தரிக்கின்றோம்” என்று தெளிவாக எழுதினார்.
வெறும் உணர்ச்சியால் மட்டுமல்ல; அறிவினாலும் ஆய்ந்து பார்த்து அச்சக்தி எதனால் எல்லாம் அதிகப்படும் என்பதை உணர்ந்து தமிழுக்கு அறிவித்தார்.
“ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை,. மற்போர் முதலியவற்றிலே பழகுதல், பாடுதல் தர்க்கம், வாதம், தவம், பிரம்மச்சரியம் சுத்தம் முதலியவற்றால் ஓர் ஜாதிக்குச் சக்தி அதிகப்படுத்துகிறது” என்றார்.
“மனம் வாக்கு செயல் மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளும் புறமும் மாசில்லாது செய்யப் பழகவேண்டும். பயம், ஸந்தேஹம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தியேற்படும்” என்று தெளிவு வேறு அறிவித்தார்.
தமிழர் வீழ்ச்சிக்கும், அவர்கள் சக்திச் சிதறலுக்கும் இரண்டு காரணங்களை பாரதி மிகத்தெளிவாக அறிந்திருந்தார். முதலாவது சாதி வேற்றுமை. அடுத்து பொய்ச் சாத்திரங்களில் நம்பிக்கை. இவை இரண்டும் ஒழிய வேண்டுமென்று அடிக்கடி எச்சரித்தார்.
“தமிழருக்கு“ - கட்டுரையில்
“(தமிழா) ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே, “ஜாதியிரண்டொழிய வேறில்லை” என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள் ” என்றார்.
ஜாதிக் குழப்பம் கட்டுரையில் -
“ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில் மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்வம்,ஸஹோதரத்துவம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால் அது சாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா?” என்று மனம் உழன்று கூறினார்.
பொய்ச்சாத்திரங்களில் நம்பிக்கை தமிழருக்கு வலுப்பதைப் பற்றிய கவலை பாரதிக்கு ஏற்பட்டிருந்தது.
பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
பொய்மை யாகிப் புழுவென மடிவர்.
என்று “தமிழச்சாதி” கவிதையில் எச்சரித்துவிட்டு எது சாத்திரம் என்று சுட்டிக்காட்டி மேலும் ஓர் அபாய அறிவிப்பு தந்தார்.
சாத்திரம் - (அதாவது, மதியிலே தழுவிய கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம் ஈங்கிதிற் கலக்க மெய்திடு மாயின் மற்றதன் பின்னர் மருந்தொன் றில்லை“
தமிழருக்கு கட்டுரையிலோ -
“தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை - எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய், இவற்றை நீக்கிவிடு” என்றும்
“தமிழா எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை; எதிர் நின்று கேட்பதெல்லாம்பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரந்தான் மெய், பி்ந்திய சாஸ்திரம் பொய் என்று தீர்மானம் செய்து கொள்ளாதே காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஓர் கணக்கு ஏற்பட்டிருக்கின்றதா?” என்று கேட்டுவிட்டு ஓர் உவமையும் சொன்னார்.
“தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லிய மூடர்கள் உப்புநீரைக் குடிக்கிறார்கள்" என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.
“வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு புராணங்களைக் கேட்டு பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல் நடந்து கொள்ளாதே” என்று மேலும் இடித்துரைத்துவிட்டு,
“வருங்காலம்” கட்டுரையில் -
“உலகம் எவ்வளவு தீரமாக மாறிக்கொண்டு வருகிறதென்பதை தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவரங்களில் மனத்தைப் பதிய வைத்துக் கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விஷயங்களிலும், அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை” என்று அறிவித்தார்.
பரந்த உலக அனுபவமும், பல நாடுகளில் சென்று வாழ்வதும் நமது அற்பச் சண்டைகளை விலக்கக் கற்றுத்தரும்; புதிய வழிகாட்டும் என்பதிலே அவருக்கு மகத்தான நம்பிக்கை உண்டு.
அதே கட்டுரையில் -
“வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள், புறப்படுங்கள், தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே புத்திமான்களே!பயணத்து க்குப் பணம் தயார் செ ய்து கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளிநாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்பட வேண்டாம்” என்று ஊக்குவிக்கிறார்.
இந்தச் சிந்தனையின் எதிரொலிதான் தமிழ்த் தாய் பாட்டிலே -
“மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையொங்கும்”
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லமோ!
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!
என்ற வரிகளில் கேட்கிறது.
தமிழச்சாதி கட்டுரையில் “விதியே விதியே விதியே தமிழச்சாதியை என் செயக்கருதியிருக்கின்றாயடா” என்று சட்டையை உலக்கிக் கேட்பது போல் கேள்வி கேட்டாலும்,
நெஞ்சமும் தெய்வபக்தியும் தன்னல மறுப்பும் உடைய பல மேலோர்களை இப்போது நாட்டிலே காண்கிறோம். இது வீணாக மாட்டாது. நம்மைப் பற்றியிருந்த புன்னோய் சீக்கிரத்திலே மாறிப்போய்விடும். வானத்திலே
துந்துபியொலி அதிரக் கேட்கின்றோம்” என்று நம்பிக்கை வாக்கே வழங்குகிறார் அந்தசக்தி கட்டுரையில்,
அதுவே தமிழருக்கு அவர் வழங்கிய வாழ்த்தாகும்.
No comments:
Post a Comment