.வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கர்ஜித்தார் லோகமான்ய திலகர். அவரது கர்ஜனையின் கதிர் வீச்சுகளை குதூகலத்தோடு உள்வாங்கியவர் பாரதி.
தனது “அடங்கி நட“ கட்டுரையிலே ஒரு வாக்கியம் எழுதினார். மேதைமை ததும்பும் வாக்கு அது.
“தனக்குத்தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது“
தேசிய விடுதலை இயக்கம் என்ற மக்கள் சக்தி உருவாக்கிய மின்சார வெள்ளத்தில் திளைத்து நீந்தி முன் வரிசைக்குச் சென்று அந்த வெள்ளப் போக்கிற்கு பாதை சமைத்தவர் பாரதி.
அவரது தேசிய கீதங்கள் தேசபக்தியுள்ள ஒவ்வொருவர் மனசிலும் அன்றும் இன்றும் இனி என்றும் புதிய உத்வேகத்தை, காலத்தால் மாற்ற முடியாத கற்பூரச் சுடரொளியை எழுப்புவன.
“எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? - அவ - மானமோ?
என்றும்,
“சதையைத் துண்டுதுண் டாக்கினு முன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் - ஓயுமோ?
இதயத்துள்ளே யிலங்கு மஹாபக்தி
யேகுமோ? நெஞ்சம் - வேகுமோ?
என்றும் ஆங்கிலேயரைக் கேட்டவர் பாரதி.
இந்த வீரசுதந்திர வேட்கை இந்தியருக்கு உலகிலே கிடைத்த அவமரியாதை கண்டு கொதித்த, அந்த மனக் கொதிப்பை தமது கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம், என்ற கட்டுரையில் அன்றைய இந்தியர் நிலை பற்றிய பாரதி வெளியிட்டிருக்கிறார்.
இந்தியன் எங்கே போனாலும் நித்திக்கப்படுகிறான். யாரும் நம்மீது காறித்துப்புகிறார்கள். உலகத்தோர் இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர் மட்டுமல்ல, வேறே எந்த ஜாதியரும் இலேசாக ஆளலாம் என்று நம்பியிருக்கிறார்கள்“.
இப்படி இந்தியர் அவமானப்படுவதில் மனம் கொதித்த பாரதிக்கு நமது பலவீனம் புரிந்திருந்தது. கொள்கையின்மை என்பதுதான் அது. அதனால்தான் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கொள்கை வேண்டும். அதில் உறுதி வேண்டும் “ என்று வலியுறுத்தினார்.
ஒரு கொள்கை என்பதென்ன? என்ற கேள்வியைப் போட்டு அதற்கு பதிலையும் மேற்படி கட்டுரையில் நிலைநாட்டினார்.
“ஒரு கொள்கையாவது, பகுத்தறிவின் துணையால் செய்யத்தக்கது இது. செய்யத்தாகதது இது என்று ஒருவன் அறிந்து முன்பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய, மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம் என்றார்.
அப்படி கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கும் சக்தி வாய்ந்த மனிதர் பலர் நம் நாட்டில் உண்டு என்று ஒப்புக்கொண்ட பாரதி ஒரு முக்கியமான கருத்தை அடுத்துக் குறிப்பிட்டார்.
“கொள்கைகளை அவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு; அவற்றின்படி நடத்தல் வேறு .யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன் படி நடக்க முடியாதவனாய் இருந்தால், அவனும் ஜீவப்பிரேதந்தான்.
அடுதுது கொள்கையற்ற மானிடப்பதர்கள், கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப்பதர்கள் என்று இரு வகுப்பினர் நம் நாட்டில் உண்டு எனக் கண்ட பாரதி.
இவ்விரண்டு வகுப்பாரால், ஜனசமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது. அவர்கள் இருக்கும் வரை சோற்றுக்குக் கேடாகவும் நிலத்திற்குப் பளுவாகவும் இருந்துபோ வார்கள்“ என்று மன்னித்து விட்டு -
“தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத்தின்னும் அரிப்பூச்சிகள் போல ஒரு வகுப்பார் தலையெடுத்திருக்கிறார்கள்“ என்று எச்சரிக்கை செய்துவிட்டு மேலே தொடர்கிறார்.
“அவர்கள் தங்கள் தலை நிறைய திவ்வியமான கொள்கைகளை அடைத்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக்கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிறார்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவ்வற்றை ஸாங்கோ பாங்கமாகப் போதிக்கிறார்கள். பொது ஜனங்கள் அக்கொள்கைகளைக் கேட்டுப் பிரமித்து இவ்வரிய கருத்துகளுக்கு ஆலயமாகவிருக்கும் இவர்கள் மனமே மனம், இம்மஹான்கள் அவதார புருஷர்களே“ என்று தம்மைப் போற்றும் பொழுது, அப்பூஜிதையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து வெற்றியடைகிறார்கள்“
பாரதி மேலும் தொடர்கிறார்
“ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச் செல்வோமானால், அங்கே எலும்பும் தோலும் குப்பையும் சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம்மஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றன“
.......ஆபத்து வந்த காலத்தில் நான் சொன்னபடி நீங்கள் செய்ய வேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது“ என்று ஜனங்களை ஏமாற்றுகிறார்கள் அதிலும் கேடாய், தங்களுடைய கொள்கைகளை ஜாலவித்தைக்காரன் போல் மாற்றி விடுகிறார்கள்“
அத்தகைய மனிதர்கள் பற்றியும் அவர்களால் நாட்டிற்கு நேரும் விளைவுகள் பற்றியும் பாரதிக்கு ஒரே கருத்துதான்.
“இம்மஹா பாதகர்களால் நம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கில் அடங்கா, ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக்கூடாதா மார்க்கங்களிற் சென்று விடுகிறார்கள்“
அத்தகைய மனிதர்கள் பற்றியும் அவர்களால் நாட்டிற்கு நேரும் விளைவுகள் பற்றியும் பாரதிக்கு ஒரே கருத்துதான்.
“இம்மஹா பாதகர்களால் நம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கில் அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்று விடுகிறார்கள்.“
நமக்கு கொள்கை வேண்டுவமேயல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை“ என்று அடித்துச் சொல்லும் பாரதி அவர்கள் பற்றி ஒரு தீர்ப்பு வழங்குகிறார்.
“ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானால் அப்பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம், அவனை எவ்வகையானாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும்.
தான் குடிக்கும் காபிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன் தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கைவிடுவானால், அவனை மானிடராய் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனினும் பதரான மனிதன் ஒருவன் இருக்க முடியாது“
அதே கட்டுரையில் பாரதி -
“சுதந்திரக் கொள்கையை உடையவன் தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடச் சித்தமாயிருக்க வேண்டும்“.
இரட்டை வேடமிடும நடிப்புச் சுதேசிகள் பற்றிய கவிதையில் பாரதி சீறும்போது, அந்த நேர்மைக் கனல் ஜ்வலிக்கிறது.
கூட்டத்திற் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ - என்றவர்
“கண்களிரண்டிருந்தும் காணுந்திறமையற்ற பெண்களின் கூட்டமடீ, தேவியர் மானமென்றும் தெய்வத்தின் பக்தியென்றும் நாவினாற் சொல்வதல்லால் நம்புதலற்றாரடீ, மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதமைகள் போலுயிரைப் பேணியிருந்தாரடீ எனக் கனன்றார்.
அவர்கள் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்ட ஊமைச்சனங்கள், ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்கள், மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரியதென்றெண்ணும் ஈனர், பழமை பழமையென்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை அறியாப பாமர்ர்!“ என்று தீர்ப்பெழுதுகிறார்.
வீரசுதந்திரம் வேண்டி நிற்பது மாபெரும் பொறுப்பு, அதற்குபின் மற்றொன்று நினைப்பது வீழ்ச்சி என்பது பாரதி கட்சி.
“ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்து வாரோ?“
என்று கேட்ட பாரதிக்கு ஆழ்ந்த ஞான அமைதியோடு கேட்க மற்றொரு கேள்வி அதே பாடலில் பாக்கியிருந்தது.
பிறந்தவர் யாவரு மிறப்ப துறுதியெனும்
பெற்றியை யறிந்தாரேல் - மானம்
துறந்தற மறந்துபின் னுயிர்கொண்டு வாழ்வது
சகமென்று மதிப்பாரோ?
வீரசுதந்திரம் விண்ணின் ரவி (சூரியன்) அவருக்கு அதை விற்று விட்டு வெறும் மின்மினி கொள்ளும் பேதைமை மறுத்து-
கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
என்று “மண்ணின் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பையிழப்பாரைக் கண்டு மனம் நொந்து கேட்டார்
“கண்ணிரண்டும் விற்று சிற்திரம் வாங்கினாற்
கைகொட்டிச் சிரியாரோ?
வந்தே மாதரமென்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவரோ?“
பாரதியின் சுதந்திர தாகம் மாட்சிமை வாய்ந்தது
கண்ணீராற் காக்கப்பட்டது. அது எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளந்த வண்ண விளக்கு.
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணி.
எது இல்லையென்றால் வாழ்வு இல்லையோ அந்த வான்மழை.
இப்படியெல்லாம் அவர் போற்றிய சுதந்திரத்தை வேண்டி, மனம் கரைந்து உருகிப் பெருகி, சர்வேசனிடம் அவர் விடுத்த பிரார்தனையிலே
“வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
பொய்க்கோ வுடலும் பொருளுயிரும் வாடு றோம்
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுவே?
என்று அவரது சுதந்திர தாகம் கதறித் துடித்த துடிப்பிலே, நேர்மையின் உள்ளொலி கேட்கிறது.
பாரதி தவிர மற்ற எந்த தேசீய கவிக்கும் பாரத நாட்டின் பெருமைகள் பற்றி இவ்வளவு பூரிப்பு இருந்திருக்குமா? என்று ஐயம் ஏற்படுவது போல் அவர் மனம் ஆனந்தத்தில் விம்மி இருக்கிறது. பாரதமாதா பாடலில்
“முன்னை யிலங்கை அரக்கர் அழிய
முடிந்தவில் யாரடை வில்“
“காண்டிவ மேந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோளெவர் தோள்?“
“சாகும்பொழுதில் இருசெவி குண்டலம்
தந்த தெவர்கொடைக்கை?“
“போர்க்களத் தேபர ஞானமெய்யக் கீதை
புகன்ற தெவருடைவாய்?
-என்று இதிகாசப் பெருமைகளை பாரத மாதாவின் பெருமைகளாகக் கருதிப் பூரித்தார் பாரதி.
இத்தனை பெருமைகளும் எந்த மணிக்கயிற்றால் வலுவுற்று நிற்கிறதோ அந்த ஒற்றுமை என்ற கயிற்றை அவர் முக்கியமானதாக மதித்தார்.
அந்த பக்கம் அறுந்தால் என்ன நேரும் என்பது நினைவூட்டப்பட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
“ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கி அனைவர்க்கும் தாழ்வே
ஒன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்?“
-என்ற எக்காலத்துக்கும் பொருந்தும் ஞானவாசகம் சொன்ன பாரதி -
அவர் வேண்டி நின்ற வீரசுதந்திரத்தைக் காப்போர் வரிசையில் செந்தமிழ் நாட்டுப் பொருநர், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்து தெலுங்கர், தாயின் சேவடிக்கே பணி செய்திடும் துளுவர்.
“கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பூதலம் முற்றிடும் வரையும், அறப் போர் விறல் யாவும் மறப்புறும் வரையும், மாதர்கள் கற்புள்ளவரையும், பாரில் மறைவரும் கீர்த்தி கொண்ட ரஜபுத்ர வீரர் -
“பஞ்சநத்த்துப் பிறந்தோர், முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார், துஞ்சும் பொழுதினும் கூட தாயின் பதத்தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும், ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு சொன்னார்.
“எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கு மந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் -வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்“
என்பதைவிட வேறு எந்த வாசகம் ஒருமைப்பாடு போற்றிவிட முடியும்?
தமது கட்டுரையில் -
“மழையென்றும், வெய்யிலென்றும், காற்றென்றும் பசியென்றும், தாமமென்றும் நித்திரையென்றும் பாராட்டாதே. இந் சரீரமே அநித்தியம் என்றால் அதையொட்டிய அவஸ்தைகள் நித்தியமாகுமா?“ என்று கேட்ட பாரதி நமக்கு வழங்கிய பிரதான அறிவுரை.
“இந்திரிய அவஸ்தைகளுக்கு அஞ்சியாவது, இந்திரிய சுகங்களைக் கோரியாவது, தேசிய தர்மத்தைக் கைவிடாதே“ என்பது தான்.
அவரது தேச தரிசனம், பாரத நாட்டின்மீது செல்கையில் எங்கள் அன்னை பயங்கரி, எங்கள் மந்தித் தெய்வதம், பாரத்தேவி, பாரத ராணி, வயிரவி, பாரத நாயகி, ஆரியராணி என்று சக்தி தரிசனமாக மலர்கிறது.
பாரத நாட்டின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை மாபெரும் நம்பிக்கை, இமயமலை போன்ற நம்பிக்கை அது.
“ எல்லாரு மமரநிலை யெய்துநன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க
-என்று மும்முறை உறுதி கூறுமளவு வைரம்பாய்ந்த்து அவரது நம்பிக்கை.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கர்ஜித்தார் லோகமான்ய திலகர். அவரது கர்ஜனையின் கதிர் வீச்சுகளை குதூகலத்தோடு உள்வாங்கியவர் பாரதி.
தனது “அடங்கி நட“ கட்டுரையிலே ஒரு வாக்கியம் எழுதினார். மேதைமை ததும்பும் வாக்கு அது.
“தனக்குத்தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது“
தேசிய விடுதலை இயக்கம் என்ற மக்கள் சக்தி உருவாக்கிய மின்சார வெள்ளத்தில் திளைத்து நீந்தி முன் வரிசைக்குச் சென்று அந்த வெள்ளப் போக்கிற்கு பாதை சமைத்தவர் பாரதி.
அவரது தேசிய கீதங்கள் தேசபக்தியுள்ள ஒவ்வொருவர் மனசிலும் அன்றும் இன்றும் இனி என்றும் புதிய உத்வேகத்தை, காலத்தால் மாற்ற முடியாத கற்பூரச் சுடரொளியை எழுப்புவன.
“எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? - அவ - மானமோ?
என்றும்,
“சதையைத் துண்டுதுண் டாக்கினு முன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் - ஓயுமோ?
இதயத்துள்ளே யிலங்கு மஹாபக்தி
யேகுமோ? நெஞ்சம் - வேகுமோ?
என்றும் ஆங்கிலேயரைக் கேட்டவர் பாரதி.
இந்த வீரசுதந்திர வேட்கை இந்தியருக்கு உலகிலே கிடைத்த அவமரியாதை கண்டு கொதித்த, அந்த மனக் கொதிப்பை தமது கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம், என்ற கட்டுரையில் அன்றைய இந்தியர் நிலை பற்றிய பாரதி வெளியிட்டிருக்கிறார்.
இந்தியன் எங்கே போனாலும் நித்திக்கப்படுகிறான். யாரும் நம்மீது காறித்துப்புகிறார்கள். உலகத்தோர் இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர் மட்டுமல்ல, வேறே எந்த ஜாதியரும் இலேசாக ஆளலாம் என்று நம்பியிருக்கிறார்கள்“.
இப்படி இந்தியர் அவமானப்படுவதில் மனம் கொதித்த பாரதிக்கு நமது பலவீனம் புரிந்திருந்தது. கொள்கையின்மை என்பதுதான் அது. அதனால்தான் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கொள்கை வேண்டும். அதில் உறுதி வேண்டும் “ என்று வலியுறுத்தினார்.
ஒரு கொள்கை என்பதென்ன? என்ற கேள்வியைப் போட்டு அதற்கு பதிலையும் மேற்படி கட்டுரையில் நிலைநாட்டினார்.
“ஒரு கொள்கையாவது, பகுத்தறிவின் துணையால் செய்யத்தக்கது இது. செய்யத்தாகதது இது என்று ஒருவன் அறிந்து முன்பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய, மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம் என்றார்.
அப்படி கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கும் சக்தி வாய்ந்த மனிதர் பலர் நம் நாட்டில் உண்டு என்று ஒப்புக்கொண்ட பாரதி ஒரு முக்கியமான கருத்தை அடுத்துக் குறிப்பிட்டார்.
“கொள்கைகளை அவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு; அவற்றின்படி நடத்தல் வேறு .யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன் படி நடக்க முடியாதவனாய் இருந்தால், அவனும் ஜீவப்பிரேதந்தான்.
அடுதுது கொள்கையற்ற மானிடப்பதர்கள், கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப்பதர்கள் என்று இரு வகுப்பினர் நம் நாட்டில் உண்டு எனக் கண்ட பாரதி.
இவ்விரண்டு வகுப்பாரால், ஜனசமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது. அவர்கள் இருக்கும் வரை சோற்றுக்குக் கேடாகவும் நிலத்திற்குப் பளுவாகவும் இருந்துபோ வார்கள்“ என்று மன்னித்து விட்டு -
“தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத்தின்னும் அரிப்பூச்சிகள் போல ஒரு வகுப்பார் தலையெடுத்திருக்கிறார்கள்“ என்று எச்சரிக்கை செய்துவிட்டு மேலே தொடர்கிறார்.
“அவர்கள் தங்கள் தலை நிறைய திவ்வியமான கொள்கைகளை அடைத்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக்கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிறார்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவ்வற்றை ஸாங்கோ பாங்கமாகப் போதிக்கிறார்கள். பொது ஜனங்கள் அக்கொள்கைகளைக் கேட்டுப் பிரமித்து இவ்வரிய கருத்துகளுக்கு ஆலயமாகவிருக்கும் இவர்கள் மனமே மனம், இம்மஹான்கள் அவதார புருஷர்களே“ என்று தம்மைப் போற்றும் பொழுது, அப்பூஜிதையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து வெற்றியடைகிறார்கள்“
பாரதி மேலும் தொடர்கிறார்
“ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச் செல்வோமானால், அங்கே எலும்பும் தோலும் குப்பையும் சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம்மஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றன“
.......ஆபத்து வந்த காலத்தில் நான் சொன்னபடி நீங்கள் செய்ய வேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது“ என்று ஜனங்களை ஏமாற்றுகிறார்கள் அதிலும் கேடாய், தங்களுடைய கொள்கைகளை ஜாலவித்தைக்காரன் போல் மாற்றி விடுகிறார்கள்“
அத்தகைய மனிதர்கள் பற்றியும் அவர்களால் நாட்டிற்கு நேரும் விளைவுகள் பற்றியும் பாரதிக்கு ஒரே கருத்துதான்.
“இம்மஹா பாதகர்களால் நம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கில் அடங்கா, ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக்கூடாதா மார்க்கங்களிற் சென்று விடுகிறார்கள்“
அத்தகைய மனிதர்கள் பற்றியும் அவர்களால் நாட்டிற்கு நேரும் விளைவுகள் பற்றியும் பாரதிக்கு ஒரே கருத்துதான்.
“இம்மஹா பாதகர்களால் நம் தேசத்திற்கு விளையும் தீமைகள் கணக்கில் அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்று விடுகிறார்கள்.“
நமக்கு கொள்கை வேண்டுவமேயல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை“ என்று அடித்துச் சொல்லும் பாரதி அவர்கள் பற்றி ஒரு தீர்ப்பு வழங்குகிறார்.
“ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானால் அப்பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம், அவனை எவ்வகையானாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும்.
தான் குடிக்கும் காபிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன் தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கைவிடுவானால், அவனை மானிடராய் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனினும் பதரான மனிதன் ஒருவன் இருக்க முடியாது“
அதே கட்டுரையில் பாரதி -
“சுதந்திரக் கொள்கையை உடையவன் தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடச் சித்தமாயிருக்க வேண்டும்“.
இரட்டை வேடமிடும நடிப்புச் சுதேசிகள் பற்றிய கவிதையில் பாரதி சீறும்போது, அந்த நேர்மைக் கனல் ஜ்வலிக்கிறது.
கூட்டத்திற் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ - என்றவர்
“கண்களிரண்டிருந்தும் காணுந்திறமையற்ற பெண்களின் கூட்டமடீ, தேவியர் மானமென்றும் தெய்வத்தின் பக்தியென்றும் நாவினாற் சொல்வதல்லால் நம்புதலற்றாரடீ, மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதமைகள் போலுயிரைப் பேணியிருந்தாரடீ எனக் கனன்றார்.
அவர்கள் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்ட ஊமைச்சனங்கள், ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்கள், மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரியதென்றெண்ணும் ஈனர், பழமை பழமையென்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை அறியாப பாமர்ர்!“ என்று தீர்ப்பெழுதுகிறார்.
வீரசுதந்திரம் வேண்டி நிற்பது மாபெரும் பொறுப்பு, அதற்குபின் மற்றொன்று நினைப்பது வீழ்ச்சி என்பது பாரதி கட்சி.
“ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்து வாரோ?“
என்று கேட்ட பாரதிக்கு ஆழ்ந்த ஞான அமைதியோடு கேட்க மற்றொரு கேள்வி அதே பாடலில் பாக்கியிருந்தது.
பிறந்தவர் யாவரு மிறப்ப துறுதியெனும்
பெற்றியை யறிந்தாரேல் - மானம்
துறந்தற மறந்துபின் னுயிர்கொண்டு வாழ்வது
சகமென்று மதிப்பாரோ?
வீரசுதந்திரம் விண்ணின் ரவி (சூரியன்) அவருக்கு அதை விற்று விட்டு வெறும் மின்மினி கொள்ளும் பேதைமை மறுத்து-
கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
என்று “மண்ணின் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பையிழப்பாரைக் கண்டு மனம் நொந்து கேட்டார்
“கண்ணிரண்டும் விற்று சிற்திரம் வாங்கினாற்
கைகொட்டிச் சிரியாரோ?
வந்தே மாதரமென்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவரோ?“
பாரதியின் சுதந்திர தாகம் மாட்சிமை வாய்ந்தது
கண்ணீராற் காக்கப்பட்டது. அது எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளந்த வண்ண விளக்கு.
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணி.
எது இல்லையென்றால் வாழ்வு இல்லையோ அந்த வான்மழை.
இப்படியெல்லாம் அவர் போற்றிய சுதந்திரத்தை வேண்டி, மனம் கரைந்து உருகிப் பெருகி, சர்வேசனிடம் அவர் விடுத்த பிரார்தனையிலே
“வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
பொய்க்கோ வுடலும் பொருளுயிரும் வாடு றோம்
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுவே?
என்று அவரது சுதந்திர தாகம் கதறித் துடித்த துடிப்பிலே, நேர்மையின் உள்ளொலி கேட்கிறது.
பாரதி தவிர மற்ற எந்த தேசீய கவிக்கும் பாரத நாட்டின் பெருமைகள் பற்றி இவ்வளவு பூரிப்பு இருந்திருக்குமா? என்று ஐயம் ஏற்படுவது போல் அவர் மனம் ஆனந்தத்தில் விம்மி இருக்கிறது. பாரதமாதா பாடலில்
“முன்னை யிலங்கை அரக்கர் அழிய
முடிந்தவில் யாரடை வில்“
“காண்டிவ மேந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோளெவர் தோள்?“
“சாகும்பொழுதில் இருசெவி குண்டலம்
தந்த தெவர்கொடைக்கை?“
“போர்க்களத் தேபர ஞானமெய்யக் கீதை
புகன்ற தெவருடைவாய்?
-என்று இதிகாசப் பெருமைகளை பாரத மாதாவின் பெருமைகளாகக் கருதிப் பூரித்தார் பாரதி.
இத்தனை பெருமைகளும் எந்த மணிக்கயிற்றால் வலுவுற்று நிற்கிறதோ அந்த ஒற்றுமை என்ற கயிற்றை அவர் முக்கியமானதாக மதித்தார்.
அந்த பக்கம் அறுந்தால் என்ன நேரும் என்பது நினைவூட்டப்பட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
“ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கி அனைவர்க்கும் தாழ்வே
ஒன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்?“
-என்ற எக்காலத்துக்கும் பொருந்தும் ஞானவாசகம் சொன்ன பாரதி -
அவர் வேண்டி நின்ற வீரசுதந்திரத்தைக் காப்போர் வரிசையில் செந்தமிழ் நாட்டுப் பொருநர், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்து தெலுங்கர், தாயின் சேவடிக்கே பணி செய்திடும் துளுவர்.
“கன்னடர் ஒட்டியரோடு போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பூதலம் முற்றிடும் வரையும், அறப் போர் விறல் யாவும் மறப்புறும் வரையும், மாதர்கள் கற்புள்ளவரையும், பாரில் மறைவரும் கீர்த்தி கொண்ட ரஜபுத்ர வீரர் -
“பஞ்சநத்த்துப் பிறந்தோர், முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார், துஞ்சும் பொழுதினும் கூட தாயின் பதத்தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும், ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு சொன்னார்.
“எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கு மந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் -வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்“
என்பதைவிட வேறு எந்த வாசகம் ஒருமைப்பாடு போற்றிவிட முடியும்?
தமது கட்டுரையில் -
“மழையென்றும், வெய்யிலென்றும், காற்றென்றும் பசியென்றும், தாமமென்றும் நித்திரையென்றும் பாராட்டாதே. இந் சரீரமே அநித்தியம் என்றால் அதையொட்டிய அவஸ்தைகள் நித்தியமாகுமா?“ என்று கேட்ட பாரதி நமக்கு வழங்கிய பிரதான அறிவுரை.
“இந்திரிய அவஸ்தைகளுக்கு அஞ்சியாவது, இந்திரிய சுகங்களைக் கோரியாவது, தேசிய தர்மத்தைக் கைவிடாதே“ என்பது தான்.
அவரது தேச தரிசனம், பாரத நாட்டின்மீது செல்கையில் எங்கள் அன்னை பயங்கரி, எங்கள் மந்தித் தெய்வதம், பாரத்தேவி, பாரத ராணி, வயிரவி, பாரத நாயகி, ஆரியராணி என்று சக்தி தரிசனமாக மலர்கிறது.
பாரத நாட்டின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை மாபெரும் நம்பிக்கை, இமயமலை போன்ற நம்பிக்கை அது.
“ எல்லாரு மமரநிலை யெய்துநன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க
-என்று மும்முறை உறுதி கூறுமளவு வைரம்பாய்ந்த்து அவரது நம்பிக்கை.
No comments:
Post a Comment