உயிர்த்தீயினிலே வளர்சோதியே
அக்கினி, தீ, நெருப்பு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இயற்கைச்சக்தி, ஐம்பெரும் பூதங்களில் ஒன்று மட்டுமல்ல.
ஆற்றல் அனைத்திற்கும் அதுவே குறியீடு, தீ அழிப்பது மட்டுமல்ல, ஆக்குவதும் அதுவே, பசித்தீயை சமஸ்கிருதம் ஜாடராக்னி என்று வழங்கியது. பசித் தீ அணைய தீயின் உதவியின்றி எப்பொருளையும் சமைக்க முடியாது. சமைக்கப்படும் எப்பொருளும் தீயினால் விளைந்ததே.
அது மட்டுமல்ல-
செல்வங்களுக்கெல்லாம் தாயகம் தீயே, அதன் உதவியின்றி எந்த உலோகத்தையும் செல்வத்தின் செலாவணி யாக மாற்ற இயலாது.
பெய்யும் மழையே கூட, கதிரவனின் எரி தழல்கள் இன்றிப் பெய்யாது. பொருள்களாகத் திரண்டிருப்பதெல்லாம் தீயின் உறங்கும் வடிவங்கள். உறைந்த ஒடுக்கங்கள் தான்.
கண் காணும் செல்வங்கள் அனைத்துக்கும் தாய் என்று இந்துக்களால் போற்றப்படும் திருமகள் அக்னியின் குமாரி என்று ஸ்ரீஸூ க்தம் குறிப்பிடுகிறது.
தீயின்றி மனித வாழ்வு எவ்வகையிலும் நடைபெறாது. அதனால் தானோ என்னமோ, மகாகவி தன் கவிதை, வசனம் இரண்டிலும் தீயின் மீதுள்ள மாளாக் காதலை தம் படைப்பு முழுவதும் வெளியிட்டுள்ளார்.
கண்ணனைக் கதாதலி கண்ணம்மாவாக்கிப் பாடிய காதல் பாட்டு தான் கண்ணம்மாப் பாட்டுக்கள் அவற்றில் மூன்றாவது பாட்டில
- கண்ணம்மாவென்ற பேர்சொலும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர்சோதியே - என்றன்
சிந்தனை யேஎன்றன் சித்தமே!
என இறுதி வரிகளைப் போட்டார்
காதலியின் பெயர் உயிர்த் தீயினிலே வளர் சோதி என்ற புதுமை தமிழிலக்கியத்தில் மட்டுமல்ல; உலக இலக்கியங்களிலும் தேடினாலும் கிட்டுவது அருமை.
அது கண்ணம்மாவானால் என்ன? குமர வடிவேலன் ஆயின் என்ன? குளக்கரை இருந்து பக்தரின் மனக்கரை பரவும் கற்பக விநாயகன் எனினும் என்ன?
மகாகவிக்கு எல்லோர் மீதும் கொண்ட பக்தி தீயின் வடிவம்தான்
அந்த பக்தி மூலம் தீ இதயத்தில் வளர வேண்டும் என்பது அவர்வேட்கை.
“பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன்“ என்று மணக்குள விநாயகர் மீது விநாயகர் நான் மணி மாலை பாடவரும் பாரதி வாயே திறவாத மௌனத்திலிருந்து விநாயகர் மலரடிக்கு
நீயே நிகர்த்தொளி வீசுந்தமிழ்க்கவி செய்குவனே என்று தான் முடிவெடுக்கிறார்.
அக் கணபதி தாளைக் கருத்திலே வைப்பதால் வரும் குணம் பலவாம். கேளீர் என்று நம்மை அழைத்துச் சொல்லும் பாரதி, பக்தியின் பயனாக
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும் அக்னி தோன்றும். ஆண்மை வலியுறும் என்கிறார்.
பாரதிக்கு விநாயகரைப் போற்றும் போது
“சுடரே போற்றி“ என்றுதான் கூறத் தோன்றுகிறது.
அவரிடம் அபயம் கேட்கும்போதோ-
“வேதச்சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயநான் கேட்டேன்“
என்றுதான் கேட்க முடிகிறது.
கணபதியிடம் கேட்கும் வரம் கூட-
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
உளமெனு நாட்டை யொருபிழை யின்றி
ஆள்வதும் பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும் தான்.
முருகன் பாட்டிலோ மகாகவிக்கு
“துணிவே கனலே, வருக“
என் வரவேற்கும் ஆற்றலாக முருகன் தென்படுகிறான்.
“தீவளர்த் தேபழ வேதியர் - நின்றன்
சேவகத் தின்புகழ் காட்டினார்“
என்று வேதியர் வேள்வியிலே வெற்றி வடிவேலன் சேவகம் தென்பட்டதை மகாகவி உணர்ந்தார்.
கிளிப்பாட்டிலே கூட-
தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணியனை நேயத் துடன் பணிந்தால் - கிளியே நெருங்கித் துயர் வருமோ?
என்று குமரன் வடிவம் தூய பெருங்கனல் என்று குறிப்பிடுகிறார் மகாகவி.
தீயைத் தன் வாழ்வு முற்றிலும் குறியீடாக்க் கொண்டு வாழ்ந்தவர் பாரதி.
தீ அவருக்கு அறிவின் ஒளியாய்; உணர்வின் மின்னலாய் மட்டுமல்ல; ஒரு பேரின்பமாகவே தோன்றியிருக்கிறது இல்லாவிட்டால்
“தீக்குள் விரலை வைத்தால் நினைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா“என்று பாடத் தோன்றுமா?
தீயின், ஒளியின், தீராத இளமையின் முழுவடிவமாக மகாகவிக்குத தென்படுவது ஞாயிறு வசன கவிதையிலே-
அறிவு எது போல் சுடரும்?
அறிவுத் தெய்வத் தின் கோயில் எது? என்று கேட்டுவிட்டு விடையும் சொன்னார்.
ஞாயிறு
மகாகவி தன் அக்னிமோகம், தீ வேட்கை ஏன் என்பதற்கு மிகத் தெளிவாக ஞாயிறு வசன கவிதையிலும் விளக்கம் தருகிறார்.
நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி மின்னல்; இரத்தினம், கனல், தீக்கொழுந்து.
இவையெல்லாம் நினது நிகழ்ச்சி என்று வர்ணித்துச் செல்பவர் உவமைகளின் மாணிக்கம் போன்ற ஒரு வரியை அடுத்துப் போட்டார்.
கண் நினது வீடு
கண்ணை ஒளியின் வீடு என்ற உவமையே என்னமாய் ஒளி வீசுகிறது!
அவர் மேலே சொல்வது தான் பாரதியின் இதயக்கனல் முழுவதற்கு உட்கருவாக, அக்கினிக் குஞ்சாக இருந்திருக்கும் என்று புரிய வைக்கிறது.
அறிவு நின் குறி; அறிவின் குறி நீ
தீயின் பெருமைகளை அடுத்த வரிகளில் மேலும் விரிவாகச சொல்கிறார்.
நீ சுடுகின்றாய் வாழ்க! நீ காட்டுகின்றாய் வாழ்க!
உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்
வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய் வாழ்க!
பாரதியின் தீ வணக்கம், ஆதிகால வேத ரிஷிகளின் வேள்விகளையும் யோக யக்ஞங்களையும் அடியொற்றியது என்று கூறலாம்.
அவரது ஆழ்ந்த வேத, உபநிஷத் ஞானத்தின் எதிரொலி என்று கூறுவதும் தவறாகாது.
“ஆரிய தரிசனம்“ பாடலில் -
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்“
என்றும் தமிழ்கவிதையில் ஒரு புதிய பரிசோதனை வடிவமாக ரிஷிகளும் அசுர்ர்களும் மாற்றி மாற்றிப் பாடுவது போல் எழுதப்பட்ட அக்னிஹோமம்
பாடலிலும் இது தெளிவாகப் புலப்படுகிறது.
பாரதியின் இலக்கியப் படைப்புக்களில் கவிதையும் பிற இலக்கிய வடிவங்களும் முடிவான எந்த குறிக்கோளை உடையன என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாட்டு “அக்னி பகவான்“ பற்றி அவர் பாடிய யாகப் பாட்டு.
இதில் மகாகவியின் வேத ஞானம், மகரிஷிகளின் சித்த சுத்திக்கு நிகராக ஓங்கி நிற்பதைப் பாடல் முழுவதிலும் பார்க்கலாம்.
தீயை அவர் விதவிதமான பேரிட்டு அழைக்கிறார். அவர் நெஞ்சில் எந்தெந்த உயிர் விருப்பங்களின் குறியீடாக ஒளி வீசுகிறது என்பது திரைகளெல்லாம் விலகிய திவ்விய தரிசனமாகப் புலப்படுகிறது.
தேவி மகன், திறமைக் கடவுள், செங்கதிர் வானவன், விண்ணோர்தமைத் தேனுக்கழைப்பவன், சித்தத் துணிவு, மானுடர்கேள்வன், தீமை அழிப்பவன், நன்மை சேர்த்துக் கொடுப்பவன், ஆரியர் நாயகன், உருத்திரனின் அன்புத் திருமகன் என்றெல்லாம் தீயை அழைக்கிறார் மகாகவி.
வெறும் நாமாவளி போதாது என்று விண்டுரைக்கும் ஆவலில் மேலே தொடர்கிறார்.
“கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனைத் - தொல்லைக்
காட்டை யழிப்பவனை.“ என்கிறார்.
இன்னும் தீயின் பெருமை சொல்ல வேண்டும் அதனால் பாரதி -
“நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
நீளத் தருபவனை - ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
அஞ்சலஞ் சேலென்று கூறி யெமக்குநல்
லாண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனை“ என்கிறார்
ஊம்ஹும்ம்ஹுஹுஹும். இன்னும் தீயின் பெருமைகளில் முக்கியமானவைகள் விடுபட்டிருக்கின்றன என்று பாரதிக்குத் தோன்றுகிறது.
மேலே எழுதுகிறார்.
“அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச் - செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் - தடை
யற்ற பெருந்திறலை - எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையுங் காதலும்
ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
ஏறுந் தவக்கனலை“ என்றார்
அச்சத்தைச் சுட்டெரித்து மிச்சச் சாம்பலுமின்றிச் செய்யும் அக்கினித்தேவன் பற்றி மகாகவி மேலும் ஓரிரு சபாஷ்கள் பாக்கியுண்டு எனவே தொடர்கிறேன் என்கிறார்.
“வானகத்தைச் சென்று தீண்டுவ னிங்கென்று
மண்டி யெழுந்தழலைக் - கவி
வாணர்க்கு நல்லமுதைத் தொழில்
வண்ணந் தெரிந்தவனை“ என்றார்
இப்போது பாடலின் முதற் பகுதிக்குச் செல்வோம் அங்குதான் கவிதை முதலான சகல கலை வடிவங்களில் குறிக்கோள் பற்றி பாரதி பேசுகிறார்.
தீ வளர்த்திடுவோம் - பெருந்
தீ வளர்த்திடுவோம்
எந்தத் தீ? எதன் குறியீடான தீ? எந்த நோக்கத்தில் வளரும் தீ?
ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் - களி
யாவல் வர்த்திடுவோம்
கலைகளின் தாயான சரஸ்வதியை வேண்டும் போது பாரதிக்குக் கேட்கத் தோன்றும். ஒரே வரம் ஸரஸ்வதி ஸ்தோத்திரத்தில் கடைசிப் பாடலில் தென்படுகிறது.
தீயினை நிறுத்துவீர் - நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
கோகுலத்தில் கண்ணன் பிறந்தான், வரவேற்க வந்தவர் யார்?
மகாகவி கண்ணன் பிறப்பு பாடலில் முதலில் எழுதுகிறார்.
அக்கினி வந்தான் - அவன்
திக்கை வளைத்தான் - புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்;
துக்கம் கொடுத்தாள்
தமது படைப்பு நெடுகிலும் “தீச்சுடர் தேடி, தீயை வாழ்த்தி, தீக்கனல் வீசி நடக்கும் பாரதி, ஞாயிறு வசன கவிதையிலே தீயின் வகைகளைச் சொல்கிறார்.
தீ எரிக
அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ
விரதத் தீ, வேள்வித் தீ
சினத் தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ
இவை யனைத்தையும் தொழுகின்றோம்
இவற்றைக் காக்கின்றோம்
தீயே, நீ எமது உயிரின் தோழன்,
உன்னை வாழ்த்துகின்றோம்
அக்கினி மின்னல் வடிவமானது. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே, எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றதைக் கண்ட பாரதி அதனைப் போற்றினார். அதனிடம் வேண்டினார்.
நமது விழிகளில் மின்னல் பிறந்திடுக
நமது நெஞ்சிலே மின்னல் வீசிப் பாய்க
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக
நமது பாட்டு மின்னலுடைத் தாகுக
நமது வாக்கு மின்போல் அடித்திடுக
மின் மெலியதைக் கொல்லும்
வலியதிலே வலிமை சேர்க்கும்
அது நம் வலிமையை வளர்த்திடுக
நமது உயிர்த்தீயினிலே சோதி வளர்த்திடுக.
நமது உயிர்த் தீயினில் சோதி வளர்த்திடும் தூய விருப்பம் தான் பாரதியின் அக்கினி வேட்கை.
அக்கினி, தீ, நெருப்பு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இயற்கைச்சக்தி, ஐம்பெரும் பூதங்களில் ஒன்று மட்டுமல்ல.
ஆற்றல் அனைத்திற்கும் அதுவே குறியீடு, தீ அழிப்பது மட்டுமல்ல, ஆக்குவதும் அதுவே, பசித்தீயை சமஸ்கிருதம் ஜாடராக்னி என்று வழங்கியது. பசித் தீ அணைய தீயின் உதவியின்றி எப்பொருளையும் சமைக்க முடியாது. சமைக்கப்படும் எப்பொருளும் தீயினால் விளைந்ததே.
அது மட்டுமல்ல-
செல்வங்களுக்கெல்லாம் தாயகம் தீயே, அதன் உதவியின்றி எந்த உலோகத்தையும் செல்வத்தின் செலாவணி யாக மாற்ற இயலாது.
பெய்யும் மழையே கூட, கதிரவனின் எரி தழல்கள் இன்றிப் பெய்யாது. பொருள்களாகத் திரண்டிருப்பதெல்லாம் தீயின் உறங்கும் வடிவங்கள். உறைந்த ஒடுக்கங்கள் தான்.
கண் காணும் செல்வங்கள் அனைத்துக்கும் தாய் என்று இந்துக்களால் போற்றப்படும் திருமகள் அக்னியின் குமாரி என்று ஸ்ரீஸூ க்தம் குறிப்பிடுகிறது.
தீயின்றி மனித வாழ்வு எவ்வகையிலும் நடைபெறாது. அதனால் தானோ என்னமோ, மகாகவி தன் கவிதை, வசனம் இரண்டிலும் தீயின் மீதுள்ள மாளாக் காதலை தம் படைப்பு முழுவதும் வெளியிட்டுள்ளார்.
கண்ணனைக் கதாதலி கண்ணம்மாவாக்கிப் பாடிய காதல் பாட்டு தான் கண்ணம்மாப் பாட்டுக்கள் அவற்றில் மூன்றாவது பாட்டில
- கண்ணம்மாவென்ற பேர்சொலும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர்சோதியே - என்றன்
சிந்தனை யேஎன்றன் சித்தமே!
என இறுதி வரிகளைப் போட்டார்
காதலியின் பெயர் உயிர்த் தீயினிலே வளர் சோதி என்ற புதுமை தமிழிலக்கியத்தில் மட்டுமல்ல; உலக இலக்கியங்களிலும் தேடினாலும் கிட்டுவது அருமை.
அது கண்ணம்மாவானால் என்ன? குமர வடிவேலன் ஆயின் என்ன? குளக்கரை இருந்து பக்தரின் மனக்கரை பரவும் கற்பக விநாயகன் எனினும் என்ன?
மகாகவிக்கு எல்லோர் மீதும் கொண்ட பக்தி தீயின் வடிவம்தான்
அந்த பக்தி மூலம் தீ இதயத்தில் வளர வேண்டும் என்பது அவர்வேட்கை.
“பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன்“ என்று மணக்குள விநாயகர் மீது விநாயகர் நான் மணி மாலை பாடவரும் பாரதி வாயே திறவாத மௌனத்திலிருந்து விநாயகர் மலரடிக்கு
நீயே நிகர்த்தொளி வீசுந்தமிழ்க்கவி செய்குவனே என்று தான் முடிவெடுக்கிறார்.
அக் கணபதி தாளைக் கருத்திலே வைப்பதால் வரும் குணம் பலவாம். கேளீர் என்று நம்மை அழைத்துச் சொல்லும் பாரதி, பக்தியின் பயனாக
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும் அக்னி தோன்றும். ஆண்மை வலியுறும் என்கிறார்.
பாரதிக்கு விநாயகரைப் போற்றும் போது
“சுடரே போற்றி“ என்றுதான் கூறத் தோன்றுகிறது.
அவரிடம் அபயம் கேட்கும்போதோ-
“வேதச்சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயநான் கேட்டேன்“
என்றுதான் கேட்க முடிகிறது.
கணபதியிடம் கேட்கும் வரம் கூட-
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
உளமெனு நாட்டை யொருபிழை யின்றி
ஆள்வதும் பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும் தான்.
முருகன் பாட்டிலோ மகாகவிக்கு
“துணிவே கனலே, வருக“
என் வரவேற்கும் ஆற்றலாக முருகன் தென்படுகிறான்.
“தீவளர்த் தேபழ வேதியர் - நின்றன்
சேவகத் தின்புகழ் காட்டினார்“
என்று வேதியர் வேள்வியிலே வெற்றி வடிவேலன் சேவகம் தென்பட்டதை மகாகவி உணர்ந்தார்.
கிளிப்பாட்டிலே கூட-
தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணியனை நேயத் துடன் பணிந்தால் - கிளியே நெருங்கித் துயர் வருமோ?
என்று குமரன் வடிவம் தூய பெருங்கனல் என்று குறிப்பிடுகிறார் மகாகவி.
தீயைத் தன் வாழ்வு முற்றிலும் குறியீடாக்க் கொண்டு வாழ்ந்தவர் பாரதி.
தீ அவருக்கு அறிவின் ஒளியாய்; உணர்வின் மின்னலாய் மட்டுமல்ல; ஒரு பேரின்பமாகவே தோன்றியிருக்கிறது இல்லாவிட்டால்
“தீக்குள் விரலை வைத்தால் நினைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா“என்று பாடத் தோன்றுமா?
தீயின், ஒளியின், தீராத இளமையின் முழுவடிவமாக மகாகவிக்குத தென்படுவது ஞாயிறு வசன கவிதையிலே-
அறிவு எது போல் சுடரும்?
அறிவுத் தெய்வத் தின் கோயில் எது? என்று கேட்டுவிட்டு விடையும் சொன்னார்.
ஞாயிறு
மகாகவி தன் அக்னிமோகம், தீ வேட்கை ஏன் என்பதற்கு மிகத் தெளிவாக ஞாயிறு வசன கவிதையிலும் விளக்கம் தருகிறார்.
நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி மின்னல்; இரத்தினம், கனல், தீக்கொழுந்து.
இவையெல்லாம் நினது நிகழ்ச்சி என்று வர்ணித்துச் செல்பவர் உவமைகளின் மாணிக்கம் போன்ற ஒரு வரியை அடுத்துப் போட்டார்.
கண் நினது வீடு
கண்ணை ஒளியின் வீடு என்ற உவமையே என்னமாய் ஒளி வீசுகிறது!
அவர் மேலே சொல்வது தான் பாரதியின் இதயக்கனல் முழுவதற்கு உட்கருவாக, அக்கினிக் குஞ்சாக இருந்திருக்கும் என்று புரிய வைக்கிறது.
அறிவு நின் குறி; அறிவின் குறி நீ
தீயின் பெருமைகளை அடுத்த வரிகளில் மேலும் விரிவாகச சொல்கிறார்.
நீ சுடுகின்றாய் வாழ்க! நீ காட்டுகின்றாய் வாழ்க!
உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்
வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய் வாழ்க!
பாரதியின் தீ வணக்கம், ஆதிகால வேத ரிஷிகளின் வேள்விகளையும் யோக யக்ஞங்களையும் அடியொற்றியது என்று கூறலாம்.
அவரது ஆழ்ந்த வேத, உபநிஷத் ஞானத்தின் எதிரொலி என்று கூறுவதும் தவறாகாது.
“ஆரிய தரிசனம்“ பாடலில் -
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்“
என்றும் தமிழ்கவிதையில் ஒரு புதிய பரிசோதனை வடிவமாக ரிஷிகளும் அசுர்ர்களும் மாற்றி மாற்றிப் பாடுவது போல் எழுதப்பட்ட அக்னிஹோமம்
பாடலிலும் இது தெளிவாகப் புலப்படுகிறது.
பாரதியின் இலக்கியப் படைப்புக்களில் கவிதையும் பிற இலக்கிய வடிவங்களும் முடிவான எந்த குறிக்கோளை உடையன என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாட்டு “அக்னி பகவான்“ பற்றி அவர் பாடிய யாகப் பாட்டு.
இதில் மகாகவியின் வேத ஞானம், மகரிஷிகளின் சித்த சுத்திக்கு நிகராக ஓங்கி நிற்பதைப் பாடல் முழுவதிலும் பார்க்கலாம்.
தீயை அவர் விதவிதமான பேரிட்டு அழைக்கிறார். அவர் நெஞ்சில் எந்தெந்த உயிர் விருப்பங்களின் குறியீடாக ஒளி வீசுகிறது என்பது திரைகளெல்லாம் விலகிய திவ்விய தரிசனமாகப் புலப்படுகிறது.
தேவி மகன், திறமைக் கடவுள், செங்கதிர் வானவன், விண்ணோர்தமைத் தேனுக்கழைப்பவன், சித்தத் துணிவு, மானுடர்கேள்வன், தீமை அழிப்பவன், நன்மை சேர்த்துக் கொடுப்பவன், ஆரியர் நாயகன், உருத்திரனின் அன்புத் திருமகன் என்றெல்லாம் தீயை அழைக்கிறார் மகாகவி.
வெறும் நாமாவளி போதாது என்று விண்டுரைக்கும் ஆவலில் மேலே தொடர்கிறார்.
“கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனைத் - தொல்லைக்
காட்டை யழிப்பவனை.“ என்கிறார்.
இன்னும் தீயின் பெருமை சொல்ல வேண்டும் அதனால் பாரதி -
“நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
நீளத் தருபவனை - ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
அஞ்சலஞ் சேலென்று கூறி யெமக்குநல்
லாண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனை“ என்கிறார்
ஊம்ஹும்ம்ஹுஹுஹும். இன்னும் தீயின் பெருமைகளில் முக்கியமானவைகள் விடுபட்டிருக்கின்றன என்று பாரதிக்குத் தோன்றுகிறது.
மேலே எழுதுகிறார்.
“அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச் - செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் - தடை
யற்ற பெருந்திறலை - எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையுங் காதலும்
ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
ஏறுந் தவக்கனலை“ என்றார்
அச்சத்தைச் சுட்டெரித்து மிச்சச் சாம்பலுமின்றிச் செய்யும் அக்கினித்தேவன் பற்றி மகாகவி மேலும் ஓரிரு சபாஷ்கள் பாக்கியுண்டு எனவே தொடர்கிறேன் என்கிறார்.
“வானகத்தைச் சென்று தீண்டுவ னிங்கென்று
மண்டி யெழுந்தழலைக் - கவி
வாணர்க்கு நல்லமுதைத் தொழில்
வண்ணந் தெரிந்தவனை“ என்றார்
இப்போது பாடலின் முதற் பகுதிக்குச் செல்வோம் அங்குதான் கவிதை முதலான சகல கலை வடிவங்களில் குறிக்கோள் பற்றி பாரதி பேசுகிறார்.
தீ வளர்த்திடுவோம் - பெருந்
தீ வளர்த்திடுவோம்
எந்தத் தீ? எதன் குறியீடான தீ? எந்த நோக்கத்தில் வளரும் தீ?
ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் - களி
யாவல் வர்த்திடுவோம்
கலைகளின் தாயான சரஸ்வதியை வேண்டும் போது பாரதிக்குக் கேட்கத் தோன்றும். ஒரே வரம் ஸரஸ்வதி ஸ்தோத்திரத்தில் கடைசிப் பாடலில் தென்படுகிறது.
தீயினை நிறுத்துவீர் - நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
கோகுலத்தில் கண்ணன் பிறந்தான், வரவேற்க வந்தவர் யார்?
மகாகவி கண்ணன் பிறப்பு பாடலில் முதலில் எழுதுகிறார்.
அக்கினி வந்தான் - அவன்
திக்கை வளைத்தான் - புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்;
துக்கம் கொடுத்தாள்
தமது படைப்பு நெடுகிலும் “தீச்சுடர் தேடி, தீயை வாழ்த்தி, தீக்கனல் வீசி நடக்கும் பாரதி, ஞாயிறு வசன கவிதையிலே தீயின் வகைகளைச் சொல்கிறார்.
தீ எரிக
அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ
விரதத் தீ, வேள்வித் தீ
சினத் தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ
இவை யனைத்தையும் தொழுகின்றோம்
இவற்றைக் காக்கின்றோம்
தீயே, நீ எமது உயிரின் தோழன்,
உன்னை வாழ்த்துகின்றோம்
அக்கினி மின்னல் வடிவமானது. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே, எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றதைக் கண்ட பாரதி அதனைப் போற்றினார். அதனிடம் வேண்டினார்.
நமது விழிகளில் மின்னல் பிறந்திடுக
நமது நெஞ்சிலே மின்னல் வீசிப் பாய்க
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக
நமது பாட்டு மின்னலுடைத் தாகுக
நமது வாக்கு மின்போல் அடித்திடுக
மின் மெலியதைக் கொல்லும்
வலியதிலே வலிமை சேர்க்கும்
அது நம் வலிமையை வளர்த்திடுக
நமது உயிர்த்தீயினிலே சோதி வளர்த்திடுக.
நமது உயிர்த் தீயினில் சோதி வளர்த்திடும் தூய விருப்பம் தான் பாரதியின் அக்கினி வேட்கை.
No comments:
Post a Comment