பயனுண்டு பக்தியினாலே
மனம் எப்போதும் ஒரு கூடு கட்டுகிறது. இழை இழையாக, வலை வலையாக, முடிவேயின்றி மனம் கூடு கட்டிக்கொண்டே கேட்கிறது ஓய்வே இல்லாத எண்ணங்களின் கூடு
சிலந்தி கட்டும் கூடுபோல், விடுபட முடியாமல் அதனுள்ளேயே ஒரு வலைப்பின்னலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து மனம் தவிக்கிறது. அதை மீட்க, அதை விண்ணுக்கு உயர்த்த மற்றொரு சக்தி தேவை.
அந்த சக்தியையே பக்தி என்கிறார்கள்
வேறொரு விதமாக சொல்லலாம்
மனம் எண்ணங்களின் அலைகள் சுருளும் கடலில் சிக்கித் தவிக்கிறது. எதுவோ, யாரோ கரம் நீட்டி கரை சேர்க்க வேண்டும். பொய்யா மொழியில் திருவள்ளுவர் சொன்னது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
வேறுவிதமாகவும் வள்ளுவர் சொன்னார்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கூடு கடல், நீச்சல், என ஒரு கட்டும், அதிலிருந்து விடுபடும் ஒரு முனைப்பும் என்றே பக்தியை வளையமிட்டுப் பார்ப்பது ஒரு போக்கு.
மனம் என்பது வெறும் அலைச்சல் வளையமா? எங்கிருந்து அந்த வளையம் புறப்படுகிறது? அது வாழ்நாளின் ஆற்றலை சுற்றிச்சுழன்று வீணாக்கிவிடுகிறதா? இதற்கு மாற்று கிடையாதா? உண்டு. எப்போது? எப்படி?
மனசின் எண்ண உற்பத்தி ஸ்தானத்திலேயே அதன் கர்ப்பக் கிரகத்திலேயே வேறொரு சக்தியை நிர்மாணித்து விட்டால் அது சொல்ல முடியாத ஆற்றலை உருவாக்கிவிடும்.
எண்ணச் சக்கரத்தின் இருசாக ஓர் தெய்வத்தையும், உணர்வுகளையே அதன் சுழற்சியாகவும் அமைத்து விட்டால் மனசின் உழற்சியிலிருந்து பரிபூரண விடுதலை, இப்படி நினைப்பது மற்றொரு போக்கு.
தத்துவ தரிசனங்கள் பல, பக்திக்கு பல விதமாக வியாக்கியானம் கூறுவார்கள் மகான்கள், பண்டிதர்கள்.
நம்மைப் பொறு த்தவரை பக்தி என்பது என்ன? பக்தி ஏன் தேவை? இவை முக்கியமான வினாக்கள்;
மகாகவி நம்பிக்கை என்ற கட்டுரையில் எழுதினார்.
“பக்தியாவது தெய்வத்தை நம்புதல்“ என்று
தெய்வத்தை ஏன் நம்ப வேண்டும்
நம்பிக்கையே வாழ்வின் உயிர்நாடி
“தன்னை நம்பலாமே! தெய்வம் எதற்கு? தெய்வம் மனிதக் கற்பனை தானே, தான் என்பது நிஜமல்லவா? நம்புவதற்கு நாம் போதாதா? நம்மையன்றி வேறொன்றை நம்புவது எப்படி சாத்தியம்?“
-இப்படி கடவுள் மறுப்பாளர் கூறுகின்றனர்.
அவர்கள் எல்லாம் ஒரு கூட்டமாகச் சேர்ந்து எங்கள் கூட்டத்திற்கு வந்துவிடு என்று விடுகிற கோரிக்கை தான் அது. அந்தக் கூட்டமில்லையேல் அதற்கொரு தலைவன் இல்லையேல் அவர்கள் நிராதரவாகி விடுகிறார்கள்.
முதலில்நா ம் என்ற கூட்டத்திலிருந்து நான் என்பதைப் பிரித்தெடுப்போம்.
இந்த நான் கூட ஒரு கற்பனையே, பிறந்தது முதல் நான், நான், நான், என்று நம்மைச் சூழ்ந்து பல பிற நான் களின் கூட்டத்தொகுதி உருவாக்கியதே நமது நான்.
அதாவது இந்த “நான்“ என்பது சூழ்நிலையால், காலமும் பிற இயற்கைச் சக்திகளும் ஒரு குறிப்பிட்ட சூழலில் நம்மை இருக்க விதித்ததில் உதித்தது தான்.
சூழல்மாறினால் இந்த “நானும்“ மாறும். தேவைக் கேற்ப இது மாறி மாறிச் செல்லும்.
இதையே பாரதி தாம் இயற்றிய விநாயகர் நான் மணி மாலையில்
“நான் என்றோர் தனிப்பொருள் இல்லை நானெனும் எண்ணமே வெறும் பொய் என்றான் புத்தன்“ என்று எழுதினார்.
நான் என்ற பொய்க் கற்பனையை தெய்வம் என்ற நிலைப்பொருள் மீது மாற்றியமைப்பதே தெய்வ பக்தி எனலாம்.
பக்தியினால் என்ன பயன்?
பக்தியினாலே - இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!“
என்று “பக்தி“ பாடலில் பாரதி எழுதுகிறார்.
பக்தியினால் சித்தம் தெளியும், செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும், வீரர் உறவு கிடைக்கும், மனத்திடைத் த்த்துவ முண்டாகும், நெஞ்சில் சஞ்சலமும் நீங்கி உறுதி விளங்கிடும் என்கிறார்.
“நம்பிக்கை“ கட்டுரையில் தெய்வத்தை எப்படி நம்புவது, அதனிடத்தில் என்னென்ன கேட்பது என்று விவரம் சொல்கிறார். கூறியது கூறல் எனும் பிழை பொறுத்து மீண்டும் காண்போம்.
குழந்தை நாயை நம்புவது போலவும்
பத்தினி கணவனை நம்புவது போலவும்
பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும்
தான் தன்னை நம்புவது போலவும்,
இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப் பற்றி நினைக்க வேண்டும்.
“நோய் வந்தால் அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணி வேண்டும்.
“செல்வம் வேண்டுமானால் தெய்வத்தினிடம் கேட்க வேண்டும்.
“கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா மங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால் அது கொடுக்க வேண்டும்!
தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்ப வேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை.
பக்தி பக்குவமடைந்த பிறகு தான் கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இது கர்ம விதி!“ என்று தெளிந்த அறிவுடன் பாரதி கூறுகிறார்.
நாம் மனம் தளந்துவிடக் கூடாதே என்பதற்காக பாரதி மேலும் எழுதுகிறார்.
“தெய்வத்தினிடம் கேட்ட பயன் கை கூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப் படமாமல் தெய்வ பக்தியையும், அதனால் உண்டாகும் ஊக்கத்தையும் முயற்சியையும் துணையாக் கொண்டு நடக்க வேண்டும். விதியின் முடிவுகளை தெய்வ பக்தி வெல்லும்.
எந்த அதிகாரத்தை வைத்து எப்படிச் சொல்கிறோம் என்று பாரதிக்கே ஒரு கேள்வி பிறந்துவிட்டது போலிருக்கிறது. அடித்துச் சொல்வது போல் பின்வரும் வரிகளை எழுதுகிறார்.
“இந்த உலக முழுமைக்கும் ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கை கூடும். நம்பு; கேள்.
இதற்கு அடுத்து மறவாமல் ஒரு முக்கியமான வாக்கினைப் போடுகிறார். இதுவே கர்மயோகத்தை பக்தி யோகத்துடன் இணைக்கும் உபாயச் சங்கிலி.
“நம்பு; கேள்“ என்று எழுதிய பாரதி தொடர்ந்து “ஓயாமல்தொழில் செய்து கொண்டிரு பயனுக்கு அவசரப்படாதே; தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்“ என்றார்.
அடுத்து தமக்கு சாஸ்திர, புராண, சரித்திர நிரூபணங்கள் சொல்லும் பொறுப்பு உண்டு என்று உணர்ந்து தொடர்கிறார்.
“தெய்வம் பிரஹ்லா தனை ஹிரண்யனிடமிருந்து காத்தது. முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது, பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது“
விக்கிரமாதித்தனுக்கும், காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராத புகழும் கொடுத்த்து. இவ் விதமான தெய்பக்தியை ராமானுஜர் மனிதருடைய இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார்“ என்றார்.
பாரதி பாடல்களை மேலெழுந்த வாரியாகப் படித்துச் செல்வோரும், அவரது படைப்பு முழுவதையும் நுணுகி ஆராயும் கூர்த்த அறிவுடன் படிப்போரும் கூட அவரது உள்ளம் பரம பக்தியென்ற ஆதார சுருதி மீதே இயங்குகிறது என்று எளிதில் முடிவுக்கு வருவர்.
பக்தியை, பாரதி வெறும் குருட்டு நம்பிக்கையாக, மூடப் பிடிவாதமாக்க் கொண்டவர் அல்ல, அதே சமயம் அந்த குருட்டுப் பக்தியையும் அவர் இகழ்வதில்லை.
“அடங்கி நட“ என்ற கட்டுரையில் -
“பக்தி குருட்டுப் பக்தியாக இருந்தாலும் அதிலொரு வெளியழகுண்டு, இவ்வழகை நமது நாட்டில் யாத்திரை செய்யும் அன்னியர் சிலர் கண்டு மெச்சுகிறார்கள்“ என்று எழுதிச் செல்கிறார்.
ஆனால் வெறும் குருட்டுப் பக்தி மட்டும் வைத்து சும்மாயிருப்பதை அவர் சம்மதிக்கவில்லை.
“பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம் “ என்ற கட்டுரையில் முயற்சியில் பலன் என்ற தலைப்பில் எழுதும் போது-
“...தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கும். தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும்...“
இதற்கு சாதாரண ஒரு வீட்டு உவமையை பாரதி காட்டி வைக்கிறார்.
“ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால், நாம் அதன் மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனம செலுத்துகிறோம் அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன் வேலையைவிட்டு, அதை எந்த விதத்திலாயினும் சமாதானப்படுத்த முயலுகிறோம்.
“அது போல் நாம் ஒரு காரியத்தில் ஊக்கம் வைத்து பிரயத்தனப்பட்டால் அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்“ என்று எழுதுகிறார்.
இவ்வளவு சொல்கிறவர் என்ன சொல்கிறார்?முயற்சியைத் தானே வாழ்த்துகிறார்; இதற்கு நடுவில் தெய்வம் வேறு எதற்கு ஒரு வீண் சுமை என்ற எண்ணம் நம்முள் எழுகிறது.
அதை நீக்க பக்தியின் பயன்களை இரு கூறுகளாக்கி ஆக்கபூர்வமாகவும் அது நிகழ்த்தும் மாற்றங்களை பக்தி பாடலில் விளக்குகிறார்.
அறிவு பூர்வமாகச் சொல்லவரும் போது -
காமப் பிசாசைக் குதிக்கால் கொண்டடித்து விழுத்திடலாம். தாமஸப் பேயைக் கண்டு தாக்கி மடித்திடலாம்; எந்நேரமும் தீமையை எண்ணி அஞ்சுந் தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து விடலாம்.
ஆசையைக் கொல்வோம், புலையச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம். கெட்ட பாசமறுப்போம், சோர்வுகள் போகும், சோம்பலழியும், வீம்புகள் போகும், பொய்ப் பாம்பு மடியும் என்கிறார்.
ஆக்க பூர்வமாக க்கூறும்போது-
நல்ல சேர்வைகள் சேரும் - பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
......................
கல்வி வளரும் - பல
காரியங் கையுறும், வீரியமோங்கிடும்
......................
ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும்
சொல்லுவ தெல்லாம் - மறைச்
சொல்லினைப் போல பயனுள தாகும், மெய்
வல்லமை தொன்றும், - தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்திடலாம்
என்று பட்டியலிட்டுச் செல்கையில் மகாகவி,
உண்மைப் பக்தியினாலே
என்ற சொல்லைச் சேர்க்கிறார்.
உண்மைப்பக்தி.
வித்து முளைக்கும் தன்மையென உணர்ந்த அந்தப் பேருணர்வு “வெடிப்படு மண்டத்திடி பல தாளம போட்ட“ மகாகவியின் உள்ளத்தின் மற்றோர் பரிமாணமாக வெளிப்படுகிறது.
பக்திக்கும் வித்துக்கும் ஒரு தொடர்பு கண்டு, பக்தியையும் செயலையும் ஒருங்கிணைந்து வித்து முளைக்கின்ற அந்த நிதானத்திலே ஒரு பொறுமை கண்டு கவிதை செய்த மகாகவி -
“முயற்சியின் பயன்“ என்ற தலைப்பில் கட்டுரையிலே
“பல்லாயிர வருஷங்களாக, நாம் அடிமைப்பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை.
“உங்களுடைய வழி இதுதான்“ என்று சட்டம் ஏற்படுத்தி வைத்த்து.
இப்போது நாம் “இப்படி இருக்கமாட்டோம்“ என்றால்
“சரி, ஆனால் பாருங்கள், உங்களுக்காக இன்னொரு வழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்“ என்று கூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.
“நான் தூங்குவேன்“ என்று தெய்வத்தினிடம் சொன்னால் தெய்வம் “ஸுகமாகத் தூங்கு. உனக்கு மெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்“ என்று சொல்லி நம்மைத் தூங்கப் பண்ணுகிறது.
“மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்“ என்றால் “ எழுந்திரு குழந்தாய், இதோ பார்; உனக்கு இந்த பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன். அந்த வழியே போய் நீ நன்மை அடை“ என்கிறது - என எழுதுகிறார்.
ஆக பக்தியை செயல்கள் புரியத் தேவையான இயக்கு சக்தியாக, தீமையற்ற மனோ விசாலமாகவே பாரதி புரிந்து கொண்டிருக்கிறார் என்ற தெளிவு நம்முள் எழுகிறது.
செயல்களையே புரிந்து கொண்டு இன்பத்தை மறுத்துத் துறந்துவிடு என்று கூறவில்லை.
பக்தியின் இரு வழிகளை பாரதி அறிந்தவர்
நவராத்திரி - 2 என்ற கட்டுரையிலே அதை குறிப்பாகவே சொல்லி விடுகிறார்.
முக்திக்கு மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி; இகலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி இன்பங்கள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொள்வது மற்றொரு வழி.
இதற்கு இலக்கியத்திலிருந்தும் இதிகாசத்திலிருந்தும் பாரதி மேற்கோள் தருகிறார்.
“சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்? அர்ச்சுனன் தனக்குச் சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்? ஸ்ரீ கிருஷ்ணனிடத்திலே கேட்டான் . ஸ்ரீ கிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்“
இன்பம் மனிதனுக்கு வேண்டுமா வேண்டாமா? இதிலே தெய்வத்தின் தீர்மானம் என்ன? இந்த வினாக்களுக்கு பாரதி தரும் விடை -
“இகலோகத்தில் எல்லா விதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத் திறமை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம்.
“தெய்வமே, நான் தூங்குகிறேன், நீ எனக்கு மாம்பழம் கொடு“ என்று கேட்கவில்லை.
“தெய்வமே! தெய்வமே! மாம்பழ விஷயத்தில் எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே! உனக்கு புண்ணியமுண்டு. மா விதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது? சொல்லு.பாடுபச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம், ஆனால் மாம்பழம் கொடுதுதுத் தீர வேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுதுதினாய்?“ என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி, தெய்வம் உதவி செய்யும்“
தெய்வத்தின் மீது கொள்ளவேண்டிய பக்தி பற்றி பாரதி கொடுத்த புதிய பார்வை, ஆண்மையாகச செயல் புரிந்து, இடைவிடாது நாடித்தேடி இலக்கை எட்டும் உயிர்வேகமுள்ள பார்வை.
பக்தி நெறியில் ஒரு புதிய வெளிச்சம் கூட்டிய பார்வைதான் பாரதி பார்வை.
மனம் எப்போதும் ஒரு கூடு கட்டுகிறது. இழை இழையாக, வலை வலையாக, முடிவேயின்றி மனம் கூடு கட்டிக்கொண்டே கேட்கிறது ஓய்வே இல்லாத எண்ணங்களின் கூடு
சிலந்தி கட்டும் கூடுபோல், விடுபட முடியாமல் அதனுள்ளேயே ஒரு வலைப்பின்னலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து மனம் தவிக்கிறது. அதை மீட்க, அதை விண்ணுக்கு உயர்த்த மற்றொரு சக்தி தேவை.
அந்த சக்தியையே பக்தி என்கிறார்கள்
வேறொரு விதமாக சொல்லலாம்
மனம் எண்ணங்களின் அலைகள் சுருளும் கடலில் சிக்கித் தவிக்கிறது. எதுவோ, யாரோ கரம் நீட்டி கரை சேர்க்க வேண்டும். பொய்யா மொழியில் திருவள்ளுவர் சொன்னது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
வேறுவிதமாகவும் வள்ளுவர் சொன்னார்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கூடு கடல், நீச்சல், என ஒரு கட்டும், அதிலிருந்து விடுபடும் ஒரு முனைப்பும் என்றே பக்தியை வளையமிட்டுப் பார்ப்பது ஒரு போக்கு.
மனம் என்பது வெறும் அலைச்சல் வளையமா? எங்கிருந்து அந்த வளையம் புறப்படுகிறது? அது வாழ்நாளின் ஆற்றலை சுற்றிச்சுழன்று வீணாக்கிவிடுகிறதா? இதற்கு மாற்று கிடையாதா? உண்டு. எப்போது? எப்படி?
மனசின் எண்ண உற்பத்தி ஸ்தானத்திலேயே அதன் கர்ப்பக் கிரகத்திலேயே வேறொரு சக்தியை நிர்மாணித்து விட்டால் அது சொல்ல முடியாத ஆற்றலை உருவாக்கிவிடும்.
எண்ணச் சக்கரத்தின் இருசாக ஓர் தெய்வத்தையும், உணர்வுகளையே அதன் சுழற்சியாகவும் அமைத்து விட்டால் மனசின் உழற்சியிலிருந்து பரிபூரண விடுதலை, இப்படி நினைப்பது மற்றொரு போக்கு.
தத்துவ தரிசனங்கள் பல, பக்திக்கு பல விதமாக வியாக்கியானம் கூறுவார்கள் மகான்கள், பண்டிதர்கள்.
நம்மைப் பொறு த்தவரை பக்தி என்பது என்ன? பக்தி ஏன் தேவை? இவை முக்கியமான வினாக்கள்;
மகாகவி நம்பிக்கை என்ற கட்டுரையில் எழுதினார்.
“பக்தியாவது தெய்வத்தை நம்புதல்“ என்று
தெய்வத்தை ஏன் நம்ப வேண்டும்
நம்பிக்கையே வாழ்வின் உயிர்நாடி
“தன்னை நம்பலாமே! தெய்வம் எதற்கு? தெய்வம் மனிதக் கற்பனை தானே, தான் என்பது நிஜமல்லவா? நம்புவதற்கு நாம் போதாதா? நம்மையன்றி வேறொன்றை நம்புவது எப்படி சாத்தியம்?“
-இப்படி கடவுள் மறுப்பாளர் கூறுகின்றனர்.
அவர்கள் எல்லாம் ஒரு கூட்டமாகச் சேர்ந்து எங்கள் கூட்டத்திற்கு வந்துவிடு என்று விடுகிற கோரிக்கை தான் அது. அந்தக் கூட்டமில்லையேல் அதற்கொரு தலைவன் இல்லையேல் அவர்கள் நிராதரவாகி விடுகிறார்கள்.
முதலில்நா ம் என்ற கூட்டத்திலிருந்து நான் என்பதைப் பிரித்தெடுப்போம்.
இந்த நான் கூட ஒரு கற்பனையே, பிறந்தது முதல் நான், நான், நான், என்று நம்மைச் சூழ்ந்து பல பிற நான் களின் கூட்டத்தொகுதி உருவாக்கியதே நமது நான்.
அதாவது இந்த “நான்“ என்பது சூழ்நிலையால், காலமும் பிற இயற்கைச் சக்திகளும் ஒரு குறிப்பிட்ட சூழலில் நம்மை இருக்க விதித்ததில் உதித்தது தான்.
சூழல்மாறினால் இந்த “நானும்“ மாறும். தேவைக் கேற்ப இது மாறி மாறிச் செல்லும்.
இதையே பாரதி தாம் இயற்றிய விநாயகர் நான் மணி மாலையில்
“நான் என்றோர் தனிப்பொருள் இல்லை நானெனும் எண்ணமே வெறும் பொய் என்றான் புத்தன்“ என்று எழுதினார்.
நான் என்ற பொய்க் கற்பனையை தெய்வம் என்ற நிலைப்பொருள் மீது மாற்றியமைப்பதே தெய்வ பக்தி எனலாம்.
பக்தியினால் என்ன பயன்?
பக்தியினாலே - இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!“
என்று “பக்தி“ பாடலில் பாரதி எழுதுகிறார்.
பக்தியினால் சித்தம் தெளியும், செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும், வீரர் உறவு கிடைக்கும், மனத்திடைத் த்த்துவ முண்டாகும், நெஞ்சில் சஞ்சலமும் நீங்கி உறுதி விளங்கிடும் என்கிறார்.
“நம்பிக்கை“ கட்டுரையில் தெய்வத்தை எப்படி நம்புவது, அதனிடத்தில் என்னென்ன கேட்பது என்று விவரம் சொல்கிறார். கூறியது கூறல் எனும் பிழை பொறுத்து மீண்டும் காண்போம்.
குழந்தை நாயை நம்புவது போலவும்
பத்தினி கணவனை நம்புவது போலவும்
பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும்
தான் தன்னை நம்புவது போலவும்,
இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப் பற்றி நினைக்க வேண்டும்.
“நோய் வந்தால் அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணி வேண்டும்.
“செல்வம் வேண்டுமானால் தெய்வத்தினிடம் கேட்க வேண்டும்.
“கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா மங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால் அது கொடுக்க வேண்டும்!
தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்ப வேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை.
பக்தி பக்குவமடைந்த பிறகு தான் கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இது கர்ம விதி!“ என்று தெளிந்த அறிவுடன் பாரதி கூறுகிறார்.
நாம் மனம் தளந்துவிடக் கூடாதே என்பதற்காக பாரதி மேலும் எழுதுகிறார்.
“தெய்வத்தினிடம் கேட்ட பயன் கை கூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப் படமாமல் தெய்வ பக்தியையும், அதனால் உண்டாகும் ஊக்கத்தையும் முயற்சியையும் துணையாக் கொண்டு நடக்க வேண்டும். விதியின் முடிவுகளை தெய்வ பக்தி வெல்லும்.
எந்த அதிகாரத்தை வைத்து எப்படிச் சொல்கிறோம் என்று பாரதிக்கே ஒரு கேள்வி பிறந்துவிட்டது போலிருக்கிறது. அடித்துச் சொல்வது போல் பின்வரும் வரிகளை எழுதுகிறார்.
“இந்த உலக முழுமைக்கும் ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கை கூடும். நம்பு; கேள்.
இதற்கு அடுத்து மறவாமல் ஒரு முக்கியமான வாக்கினைப் போடுகிறார். இதுவே கர்மயோகத்தை பக்தி யோகத்துடன் இணைக்கும் உபாயச் சங்கிலி.
“நம்பு; கேள்“ என்று எழுதிய பாரதி தொடர்ந்து “ஓயாமல்தொழில் செய்து கொண்டிரு பயனுக்கு அவசரப்படாதே; தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்“ என்றார்.
அடுத்து தமக்கு சாஸ்திர, புராண, சரித்திர நிரூபணங்கள் சொல்லும் பொறுப்பு உண்டு என்று உணர்ந்து தொடர்கிறார்.
“தெய்வம் பிரஹ்லா தனை ஹிரண்யனிடமிருந்து காத்தது. முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது, பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது“
விக்கிரமாதித்தனுக்கும், காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராத புகழும் கொடுத்த்து. இவ் விதமான தெய்பக்தியை ராமானுஜர் மனிதருடைய இஹபரவாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார்“ என்றார்.
பாரதி பாடல்களை மேலெழுந்த வாரியாகப் படித்துச் செல்வோரும், அவரது படைப்பு முழுவதையும் நுணுகி ஆராயும் கூர்த்த அறிவுடன் படிப்போரும் கூட அவரது உள்ளம் பரம பக்தியென்ற ஆதார சுருதி மீதே இயங்குகிறது என்று எளிதில் முடிவுக்கு வருவர்.
பக்தியை, பாரதி வெறும் குருட்டு நம்பிக்கையாக, மூடப் பிடிவாதமாக்க் கொண்டவர் அல்ல, அதே சமயம் அந்த குருட்டுப் பக்தியையும் அவர் இகழ்வதில்லை.
“அடங்கி நட“ என்ற கட்டுரையில் -
“பக்தி குருட்டுப் பக்தியாக இருந்தாலும் அதிலொரு வெளியழகுண்டு, இவ்வழகை நமது நாட்டில் யாத்திரை செய்யும் அன்னியர் சிலர் கண்டு மெச்சுகிறார்கள்“ என்று எழுதிச் செல்கிறார்.
ஆனால் வெறும் குருட்டுப் பக்தி மட்டும் வைத்து சும்மாயிருப்பதை அவர் சம்மதிக்கவில்லை.
“பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம் “ என்ற கட்டுரையில் முயற்சியில் பலன் என்ற தலைப்பில் எழுதும் போது-
“...தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கும். தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும்...“
இதற்கு சாதாரண ஒரு வீட்டு உவமையை பாரதி காட்டி வைக்கிறார்.
“ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால், நாம் அதன் மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனம செலுத்துகிறோம் அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன் வேலையைவிட்டு, அதை எந்த விதத்திலாயினும் சமாதானப்படுத்த முயலுகிறோம்.
“அது போல் நாம் ஒரு காரியத்தில் ஊக்கம் வைத்து பிரயத்தனப்பட்டால் அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்“ என்று எழுதுகிறார்.
இவ்வளவு சொல்கிறவர் என்ன சொல்கிறார்?முயற்சியைத் தானே வாழ்த்துகிறார்; இதற்கு நடுவில் தெய்வம் வேறு எதற்கு ஒரு வீண் சுமை என்ற எண்ணம் நம்முள் எழுகிறது.
அதை நீக்க பக்தியின் பயன்களை இரு கூறுகளாக்கி ஆக்கபூர்வமாகவும் அது நிகழ்த்தும் மாற்றங்களை பக்தி பாடலில் விளக்குகிறார்.
அறிவு பூர்வமாகச் சொல்லவரும் போது -
காமப் பிசாசைக் குதிக்கால் கொண்டடித்து விழுத்திடலாம். தாமஸப் பேயைக் கண்டு தாக்கி மடித்திடலாம்; எந்நேரமும் தீமையை எண்ணி அஞ்சுந் தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து விடலாம்.
ஆசையைக் கொல்வோம், புலையச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம். கெட்ட பாசமறுப்போம், சோர்வுகள் போகும், சோம்பலழியும், வீம்புகள் போகும், பொய்ப் பாம்பு மடியும் என்கிறார்.
ஆக்க பூர்வமாக க்கூறும்போது-
நல்ல சேர்வைகள் சேரும் - பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
......................
கல்வி வளரும் - பல
காரியங் கையுறும், வீரியமோங்கிடும்
......................
ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும்
சொல்லுவ தெல்லாம் - மறைச்
சொல்லினைப் போல பயனுள தாகும், மெய்
வல்லமை தொன்றும், - தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்திடலாம்
என்று பட்டியலிட்டுச் செல்கையில் மகாகவி,
உண்மைப் பக்தியினாலே
என்ற சொல்லைச் சேர்க்கிறார்.
உண்மைப்பக்தி.
வித்து முளைக்கும் தன்மையென உணர்ந்த அந்தப் பேருணர்வு “வெடிப்படு மண்டத்திடி பல தாளம போட்ட“ மகாகவியின் உள்ளத்தின் மற்றோர் பரிமாணமாக வெளிப்படுகிறது.
பக்திக்கும் வித்துக்கும் ஒரு தொடர்பு கண்டு, பக்தியையும் செயலையும் ஒருங்கிணைந்து வித்து முளைக்கின்ற அந்த நிதானத்திலே ஒரு பொறுமை கண்டு கவிதை செய்த மகாகவி -
“முயற்சியின் பயன்“ என்ற தலைப்பில் கட்டுரையிலே
“பல்லாயிர வருஷங்களாக, நாம் அடிமைப்பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை.
“உங்களுடைய வழி இதுதான்“ என்று சட்டம் ஏற்படுத்தி வைத்த்து.
இப்போது நாம் “இப்படி இருக்கமாட்டோம்“ என்றால்
“சரி, ஆனால் பாருங்கள், உங்களுக்காக இன்னொரு வழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்“ என்று கூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.
“நான் தூங்குவேன்“ என்று தெய்வத்தினிடம் சொன்னால் தெய்வம் “ஸுகமாகத் தூங்கு. உனக்கு மெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்“ என்று சொல்லி நம்மைத் தூங்கப் பண்ணுகிறது.
“மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்“ என்றால் “ எழுந்திரு குழந்தாய், இதோ பார்; உனக்கு இந்த பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன். அந்த வழியே போய் நீ நன்மை அடை“ என்கிறது - என எழுதுகிறார்.
ஆக பக்தியை செயல்கள் புரியத் தேவையான இயக்கு சக்தியாக, தீமையற்ற மனோ விசாலமாகவே பாரதி புரிந்து கொண்டிருக்கிறார் என்ற தெளிவு நம்முள் எழுகிறது.
செயல்களையே புரிந்து கொண்டு இன்பத்தை மறுத்துத் துறந்துவிடு என்று கூறவில்லை.
பக்தியின் இரு வழிகளை பாரதி அறிந்தவர்
நவராத்திரி - 2 என்ற கட்டுரையிலே அதை குறிப்பாகவே சொல்லி விடுகிறார்.
முக்திக்கு மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி; இகலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி இன்பங்கள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொள்வது மற்றொரு வழி.
இதற்கு இலக்கியத்திலிருந்தும் இதிகாசத்திலிருந்தும் பாரதி மேற்கோள் தருகிறார்.
“சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்? அர்ச்சுனன் தனக்குச் சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்? ஸ்ரீ கிருஷ்ணனிடத்திலே கேட்டான் . ஸ்ரீ கிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்“
இன்பம் மனிதனுக்கு வேண்டுமா வேண்டாமா? இதிலே தெய்வத்தின் தீர்மானம் என்ன? இந்த வினாக்களுக்கு பாரதி தரும் விடை -
“இகலோகத்தில் எல்லா விதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத் திறமை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம்.
“தெய்வமே, நான் தூங்குகிறேன், நீ எனக்கு மாம்பழம் கொடு“ என்று கேட்கவில்லை.
“தெய்வமே! தெய்வமே! மாம்பழ விஷயத்தில் எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே! உனக்கு புண்ணியமுண்டு. மா விதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது? சொல்லு.பாடுபச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம், ஆனால் மாம்பழம் கொடுதுதுத் தீர வேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுதுதினாய்?“ என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி, தெய்வம் உதவி செய்யும்“
தெய்வத்தின் மீது கொள்ளவேண்டிய பக்தி பற்றி பாரதி கொடுத்த புதிய பார்வை, ஆண்மையாகச செயல் புரிந்து, இடைவிடாது நாடித்தேடி இலக்கை எட்டும் உயிர்வேகமுள்ள பார்வை.
பக்தி நெறியில் ஒரு புதிய வெளிச்சம் கூட்டிய பார்வைதான் பாரதி பார்வை.
No comments:
Post a Comment