முழுமைக்கும் பொது உடைமை
நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பொது, எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று துணிகரமாக தமிழ்க் கவிதையில் முதலில் சொன்னவர் மகாகவி.
முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்
முழுமைக் கும்பொது உடைமை
ஒப்பி லாத ஸமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க
என்று “பாரதஸமுதாயம்“ பாடலில் வாழ்த்தினார்.
அவரது சமகாலத்திலே நடந்துவந்த சோஷலிஸப் புரட்சி பற்றிய பிரக்ஞையும் அதன் போக்கு பற்றிய கவலையும் அவருக்கு இருந்தது.
பொதுவுடைமைக் கொள்கை பரவுவதில் அவருக்கு பரிபூரண மகிழ்ச்சி. முழு மன இசைவு.
“இந்த ஸித்தாந்தம் பரிபூரண ஜயமடைந்து மனிதருக்குள்ளே ஸஹஜ தர்மமாக ஏற்பட்ட பிறகு தான் மானிடர் உண்மையான நாகரீகம் உடையோராவர்” என்று செல்வம் (3) கட்டுரையில் எழுதுகிறார்.
எனினும் அது வன்முறையிலே பரவுவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அதே கட்டுரையில் தொடர்கையில்
…“இந்த முறைமை போர், கொலை, பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக்கு சம்மதம் இல்லை”.
இதற்கு காரணம் கூறும் போது பாரதி “கொலை“ கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது, அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய குறைக்காது.
“ஒரு கொலையாளிக் கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேனா பலத்தாலும் ஆயுத பலத்தாலும் மற்றொரு கொலையாளிக் கூட்டத்தை அடக்கிவிடக் கூடும். இதனாலே தோற்ற கூட்டம், நாளைக்கு பலம் அதிகப்பட்டு முந்திய கூட்டத்தை வென்றுவிடும்.
பிறகு, இதைப் பழிவாங்க முயன்று, மற்றது பலவித வேலைகள் செய்து பலமடைந்து இந்தக் கூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலை தூக்கி அதை அடக்கும், இங்ஙனம் தலைமுறை தலைமுறையாக இவ்விரண்டு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று தீமை செய்து கொண்டே இருக்கும் இதற்கு ஓய்வே கிடையாது.“
வன்முறையால் பெறுகிற விடுதலை பற்றி பாரதியார்அது உள்ளுக்குள் குமுறும் வன்மத்தால் மீண்டும் தோற்று வன்முறைக்கே மீளும் என்ற உளவியல் பார்வையோடு அணுகுகிறார்.
ருஷ்யப் புரட்சியை பாரதி வாழ்த்தினார் வரவேற்று மகிழ்ந்தார். எனினும் அதே கட்டுரையில்
“ருஷ்யாவிலும் கூட இப்போது ஏற்பட்டிருக்கும் “ஸோஷலிஸ்ட்” ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை.
”சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரே அடியாகக் குறைந்துபோய் மஹா பலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் கூட்டு வாழ்க்கைக் குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர்.
…நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரததிலே ருஷ்யாவின் மீது பாய்வார்கள், அங்கு உடைமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த அரசுகளுக்குத் துணையாக நிற்பர்.
இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும், கொள்ளைகளும், ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டாகும்.
லெனின் வழி சரியான வழியில்லை.”
ருஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றதற்குப் பூர்விக காரணங்கள் உண்டு. அந்த சரித்திர காரணங்கள் இந்தியாவில் இல்லை என்பது பாரதி கருத்து.
“பலாத்காரமாக முதலாளிகளின் உடமைகளையும் நிலஸ்வான்களின் பூமிமையும் பிடுங்கி தேசத்திற்குப் பொதுவாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கை ருஷ்யாவில் வெற்றி பெற்றதற்கு பல பூர்வ காரணங்களிருக்கின்றன.
நெடுங்காலமாகவே, ருஷியா தேசத்தில் ஆட்சி புரிவோரின் நகரற்ற கொடுங்கோன்மையிலும், அநீதங்களாலும், செல்வர்களின் குரூரத் தன்மையாலும், பல ராஜாங்கப் புரட்சிகள் நடந்து வந்திருக்கின்றபடியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பது ஸுலபமாயிற்று
…இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர்.
இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம்தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்பவும் மாட்டார்கள்.
எனவே கொள்கைகளும் கொலைகளும் சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல், ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்.
செல்வர்களுடைய உடைமைகளை பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல், இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது; ஸாத்தியமுமில்லை; என்றார்.
சமீபத்திய சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்கு முன்னரே காரணம் கண்டவர் போல் பாரதி கூற்று அமைந்தது.
பாரதி ஏற்றத்தாழ்வுகளை நன்கு எடை போட்டவர்தான்.
“உலகத்தில் செல்வத்தின் சம்பந்தமான ஏற்றத்தாழ்ச்சிகள் மற்ற எல்லாக் காரணங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டிலும் மிகக் கொடியனவாக மூண்டிருக்கின்றன” என்று அவரே எழுதினார்.
உலகிலே பொதுவுடைமை நிலவவேண்டும். ஆனால் அது சமாதானமான முறையில் வரவேண்டும் என்பது தான் அவர் விருப்பம்
அதற்கான உபாயமாக ஒன்றையும் பாரதி தெரிவித்தார்.
அது கிட்டத்தட்ட தர்மகர்த்தா சோஷலிஸம் என்று காந்திஜி கூறிய திட்டத்திற்கு நிகராக விளங்குகிறது. (இதில் ஆர்வமுடையவர் செல்வம் (2) கட்டுரையின் பிற்பகுதியில் விரிவாகக் காணலாம்)
பொதுவுடைமை பற்றி பாரதிக்கு இருந்த கருத்து அப்பழுக்கற்றது. அவர் எந்நாளும் செல்வர் தயவைச் சம்பாதித்துக் கொள்வதற்காக முயற்சி செய்தவர் அல்ல. வர்க்க ரீதியாகவும் அவர்களைச் சார்ந்தவர் அல்ல.
“இந்திய நிலை“ என்று தாம் கொண்டிருந்த கணிப்புகளுக்கு வெளிப்படையான கருத்து வடிவம் தருவதில் எதிலும் போல இவ்விஷயத்திலும் தயங்கவில்லை என்பதை நாம் உணரவேண்டும். இவை ஒரு மகாகவியின் உள்ளக் கிடக்கைகள், இதை ஏற்பதும் மறுப்பதும் வரலாறும் சமகால வாழ்வும் தீர்மானிக்க வேண்டிய பிரச்னைகள் .
நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பொது, எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று துணிகரமாக தமிழ்க் கவிதையில் முதலில் சொன்னவர் மகாகவி.
முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்
முழுமைக் கும்பொது உடைமை
ஒப்பி லாத ஸமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க
என்று “பாரதஸமுதாயம்“ பாடலில் வாழ்த்தினார்.
அவரது சமகாலத்திலே நடந்துவந்த சோஷலிஸப் புரட்சி பற்றிய பிரக்ஞையும் அதன் போக்கு பற்றிய கவலையும் அவருக்கு இருந்தது.
பொதுவுடைமைக் கொள்கை பரவுவதில் அவருக்கு பரிபூரண மகிழ்ச்சி. முழு மன இசைவு.
“இந்த ஸித்தாந்தம் பரிபூரண ஜயமடைந்து மனிதருக்குள்ளே ஸஹஜ தர்மமாக ஏற்பட்ட பிறகு தான் மானிடர் உண்மையான நாகரீகம் உடையோராவர்” என்று செல்வம் (3) கட்டுரையில் எழுதுகிறார்.
எனினும் அது வன்முறையிலே பரவுவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அதே கட்டுரையில் தொடர்கையில்
…“இந்த முறைமை போர், கொலை, பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக்கு சம்மதம் இல்லை”.
இதற்கு காரணம் கூறும் போது பாரதி “கொலை“ கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது, அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய குறைக்காது.
“ஒரு கொலையாளிக் கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேனா பலத்தாலும் ஆயுத பலத்தாலும் மற்றொரு கொலையாளிக் கூட்டத்தை அடக்கிவிடக் கூடும். இதனாலே தோற்ற கூட்டம், நாளைக்கு பலம் அதிகப்பட்டு முந்திய கூட்டத்தை வென்றுவிடும்.
பிறகு, இதைப் பழிவாங்க முயன்று, மற்றது பலவித வேலைகள் செய்து பலமடைந்து இந்தக் கூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலை தூக்கி அதை அடக்கும், இங்ஙனம் தலைமுறை தலைமுறையாக இவ்விரண்டு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று தீமை செய்து கொண்டே இருக்கும் இதற்கு ஓய்வே கிடையாது.“
வன்முறையால் பெறுகிற விடுதலை பற்றி பாரதியார்அது உள்ளுக்குள் குமுறும் வன்மத்தால் மீண்டும் தோற்று வன்முறைக்கே மீளும் என்ற உளவியல் பார்வையோடு அணுகுகிறார்.
ருஷ்யப் புரட்சியை பாரதி வாழ்த்தினார் வரவேற்று மகிழ்ந்தார். எனினும் அதே கட்டுரையில்
“ருஷ்யாவிலும் கூட இப்போது ஏற்பட்டிருக்கும் “ஸோஷலிஸ்ட்” ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை.
”சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரே அடியாகக் குறைந்துபோய் மஹா பலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் கூட்டு வாழ்க்கைக் குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர்.
…நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரததிலே ருஷ்யாவின் மீது பாய்வார்கள், அங்கு உடைமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த அரசுகளுக்குத் துணையாக நிற்பர்.
இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும், கொள்ளைகளும், ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டாகும்.
லெனின் வழி சரியான வழியில்லை.”
ருஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றதற்குப் பூர்விக காரணங்கள் உண்டு. அந்த சரித்திர காரணங்கள் இந்தியாவில் இல்லை என்பது பாரதி கருத்து.
“பலாத்காரமாக முதலாளிகளின் உடமைகளையும் நிலஸ்வான்களின் பூமிமையும் பிடுங்கி தேசத்திற்குப் பொதுவாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கை ருஷ்யாவில் வெற்றி பெற்றதற்கு பல பூர்வ காரணங்களிருக்கின்றன.
நெடுங்காலமாகவே, ருஷியா தேசத்தில் ஆட்சி புரிவோரின் நகரற்ற கொடுங்கோன்மையிலும், அநீதங்களாலும், செல்வர்களின் குரூரத் தன்மையாலும், பல ராஜாங்கப் புரட்சிகள் நடந்து வந்திருக்கின்றபடியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பது ஸுலபமாயிற்று
…இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர்.
இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம்தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்பவும் மாட்டார்கள்.
எனவே கொள்கைகளும் கொலைகளும் சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல், ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்.
செல்வர்களுடைய உடைமைகளை பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல், இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது; ஸாத்தியமுமில்லை; என்றார்.
சமீபத்திய சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்கு முன்னரே காரணம் கண்டவர் போல் பாரதி கூற்று அமைந்தது.
பாரதி ஏற்றத்தாழ்வுகளை நன்கு எடை போட்டவர்தான்.
“உலகத்தில் செல்வத்தின் சம்பந்தமான ஏற்றத்தாழ்ச்சிகள் மற்ற எல்லாக் காரணங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டிலும் மிகக் கொடியனவாக மூண்டிருக்கின்றன” என்று அவரே எழுதினார்.
உலகிலே பொதுவுடைமை நிலவவேண்டும். ஆனால் அது சமாதானமான முறையில் வரவேண்டும் என்பது தான் அவர் விருப்பம்
அதற்கான உபாயமாக ஒன்றையும் பாரதி தெரிவித்தார்.
அது கிட்டத்தட்ட தர்மகர்த்தா சோஷலிஸம் என்று காந்திஜி கூறிய திட்டத்திற்கு நிகராக விளங்குகிறது. (இதில் ஆர்வமுடையவர் செல்வம் (2) கட்டுரையின் பிற்பகுதியில் விரிவாகக் காணலாம்)
பொதுவுடைமை பற்றி பாரதிக்கு இருந்த கருத்து அப்பழுக்கற்றது. அவர் எந்நாளும் செல்வர் தயவைச் சம்பாதித்துக் கொள்வதற்காக முயற்சி செய்தவர் அல்ல. வர்க்க ரீதியாகவும் அவர்களைச் சார்ந்தவர் அல்ல.
“இந்திய நிலை“ என்று தாம் கொண்டிருந்த கணிப்புகளுக்கு வெளிப்படையான கருத்து வடிவம் தருவதில் எதிலும் போல இவ்விஷயத்திலும் தயங்கவில்லை என்பதை நாம் உணரவேண்டும். இவை ஒரு மகாகவியின் உள்ளக் கிடக்கைகள், இதை ஏற்பதும் மறுப்பதும் வரலாறும் சமகால வாழ்வும் தீர்மானிக்க வேண்டிய பிரச்னைகள் .
No comments:
Post a Comment